பக்கம் எண் :

86பாரதம்ஆரணிய பருவம்

னும் - அமலன் - குற்றமில்லாதவனும் ஆகிய சிவபிரான், சமரம் வேடன்
வடிவம் கொடு - போருக்கு உரிய வேடனது உருவத்தை அடைந்து, நரன்
கை அடியுண்டபொழுது - அருச்சுனனது கையினால் அடிபட்டபொழுது,-
வேதம்-வேதங்கள், அடியுண்டன-அடிபட்டன;விரிந்த பல ஆகமம்
விதங்கள்-விரிவாயுள்ள அனேக ஆகமங்களின் வகைகள், அடியுண்டன-;
ஒர் ஐம் பூதம்-ஒப்பற்ற பஞ்ச பூதங்கள், அடியுண்டன-; விநாழிகை முதல்
புகல் செய் பொழுதொடு - விநாழிகை முதலாகச் சொல்லப்படுகிற
காலதத்துவமும், சலிப்பு இல் பொருளின் பேதம் - நிலைபெயர்தலில்லாத
ஸ்தாவரப் பொருள்களின் வகைகளும், அடியுண்டன-;(எ-று.)

     விநாழிகை - நாழிகையின் அறுபதி லொருபங்கு.  மகளார், ஆர் -
சிறப்புணர்த்த வந்த பலர்பால்விகுதி.  'அமலன்'என்பது - தான் இயல்பாக
ஆணவம் முதலிய மலங்களின் தொடர்ச்சியில்லாதவன் என்னும் பொருளை
மாத்திரமேயன்றி, தனக்குச் சரீரமாகவுள்ள சராசரங்களின்
மலசம்பந்தமுமில்லாதவ னென்னுங் கருத்தையும் உடையது.  பின் இரண்டடி
- இறைவனது பெருஞ்சிறப்புக்களுடனே, அடியவர்க்கு எளியவனாயிருக்குந்
தன்மையையும் வெளியிட்டது.                                (113)

109.-இதுமுதல் நான்குகவிகள் - அருச்சுனனோடு
சிவவேடன் மற்போர்புரிதலைக்கூறும்.

என்பொடுகொழுந்தசை நிணங்குருதியென்னுமவையீ
                            ரிரண்டானும் வயிரா,
வன்பொடுவளர்ந்தமிரு காதிபதிகாரியெனும் வடிவழகுபெற்
                                   றமறவோன்,
அன்பினொடுபேரறம் வளர்த்தருளெயிற்றிமிக வஞ்சவ
                               பிராமவெயினன்,
பொன்புரையுமேனியிலடித்தமைபொறாது மற்போர்
                               புரியுமாறுகருதா.

இதுமுதல் மூன்றுகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.)என்பொடு - எலும்பும், கொழு தசை - கொழுமையான
தசையும், நிணம் - கொழுப்பும், குருதி-இரத்தமும், என்னும் அவை ஈர்
இரண்டான்உம் - என்று சொல்லப்படுகிற அந்த நான்கு பொருள்களாலும்,
வயிரா-வயிரங்கொண்டு [உறுதியாய்என்றபடி],வன்பொடு-வலிமையோடு,
வளர்ந்த-,மிருக அதிபதி-மிருகங்களுக்குத் தலைமையான சிங்கமொன்று,
காரி-கரு நிறமுடையது, எனும்-என்று சொல்லப்படுகிற, வடிவு அழகு -
உடம்பின் தன்மையை, பெற்ற-உடைய, மறவோன் -
பராக்கிரமமுடையனாகிய அருச்சுனன், அன்பினொடு பேர் அறம்
வளர்த்தருள் எயிற்றி மிக அஞ்ச -அன்புடனே பெரிய
தருமங்களையெல்லாம் வளர்த்தருளுகின்ற வேடச்சி வடிவமான உமாதேவி
மிகவும் அஞ்சும்படி, அபிராமன் எயினன் - அழகிய வேட வடிவமான
சிவபிரானது, பொன் புரையும் மேனியில்-பொன்னை யொத்து அருமையான
திருமேனியிலே, அடித்தமை-அடித்ததனை, பொறாது-பொறுக்காமல்,
(அவ்வேடன்),மல் போர் புரியும் ஆறு - மல்லயுத்தஞ் செய்யும்படி, கருதா
- எண்ணி,-(எ-று.)-'கருதா'என்பது - மேற்கவியில் 'தொடங்கியுற'
என்பதனோடு முடியும்.