பக்கம் எண் :

88பாரதம்ஆரணிய பருவம்

ளுரைப்பாருமுளர்.  'எனையாளுடையுமாதவனு மாதவனும்'எனப்
பாடமுமாம்.                                               (110)

111.மல்லமர்தொடங்கியிவரிருவரும்வெகுண்டுபொரமாதிரமு
                                மாநிலமுமேல்,
எல்லையுமதிர்ந்துசுழல்கின்றபொழுதத்திமயவின்ப
                        மயில்கேள்வன்வெகுளா,
நல்லிசைபுனைந்தமணிநூபுரவிசாலவொளி
                      நண்ணுபதநாண்மலரினால்,
வில்லியரிலெண்ணுதிறல்வில்லுடைய காளைதனை
                     விண்ணுலகில்வீசினனரோ.

     (இ-ள்.)இவர் இருவர்உம்-(சிவனும்அருச்சுனனும் ஆகிய)இந்த
இரண்டுபேரும், மல் அமர் தொடங்கி-மற்போரை ஆரம்பித்து, வெகுண்டு-
கோபித்து, பொர-போர்செய்ய, (அதனால்),மாதிரம்உம் - திக்குக்களும்,
மாநிலம்உம்-பெரிய பூமியும், மேல் எல்லைஉம்-மேலுலகமும்,அதிர்ந்து-
நடுங்கி, சுழல்கின்ற பொழுதத்து-சுழற்சியடைகிற காலத்தில், இமயம் இன்பம்
மயில் கேள்வன்-இமயமலையிற்பிறந்தஇன்பத்தைத்தருகின்ற மயில்போலுஞ்
சாயலையுடையஅம்பிகையின் கணவனானசிவவேடன், வெகுளா-கோபித்து,
நல் இசை புனைந்த-நல்லகீர்த்தியைக் கொண்ட, மணி நூபுரம் விசாலம்
ஒளி நண்ணு-இரத்தினச்சிலம்பினது விரிவான பிரகாசம் பொருந்திய, பதம்
நாள் மலரினால்-அன்றுமலர்ந்ததாமரைப்பூப்போல் மெல்லிய (தனது)
திருவடியினால்,வில்லியரில் எண்ணு திறல் வில் உடைய காளைதனை-
விற்போர்வல்லவர்களிற் சிறந்தவனாகநன்குமதிக்கப்படுகிற
வலிமையையுடைய காண்டீவ வில்லையுடையஇளவீரனானஅருச்சுனனை,
விண் உலகில்-ஆகாயமார்க்கத்தில், வீசினன்-தூக்கியெறிந்தான்;   (எ-று.)

     சிவ வேடனும்அருச்சுனனும் மற்போர் புரிந்தபோது உண்டான
அதிர்ச்சியால் திக்குக்கள் முதலியன நிலைகுலைந்துசுழன்றனவாக, அப்போது
சிவவேடன் வெகுண்டு அருச்சுனனைப்பிடித்துவானத்தில் தூக்கியெறிந்தன
னென்பதாம்.  மயில் - உவமையாகுபெயர்.  நல்லிசை புனைந்தபதம், நூபுர
விசாலவொளிநண்ணுபதம் என இயையும், வில்லுடைய - ஒளியுடைய
என்றுமாம்.  விண்ணினுற வீசினனரோ என்றும் பாடம்.            (111)

112.விண்ணவர்தமூர்புகுதவிண்ணவர்பிரான்மதலைவிசை
                   யுடனெழுந்து முகில்போல்,
மண்ணினிடைவீழ்தருமுன்மார்பகலமல்லதைவயங்கு
                        புறமென்று தெரியான்,
எண்ணரியஞானவொளியாகிவெளியாகிவரு
                    மெயினர்பதியானகருணைப்,
புண்ணியன்மகிழ்ந்துருகநின்றொலியுடன்பழைய
               பூசல்பொரவெண்ணியெதிர்வான்.

     (இ-ள்.)விண்ணவர் பிரான் மதலை- தேவராசனானஇந்திரனது
புத்திரனாகியஅருச்சுனன்,-விண்ணவர்தம்ஊர் புகுத-தேவலோகத்தைச்
சமீபிக்கும்படி, விசையுடன்-வேகத்தோடு, முகில் போல் - மேகம்போல,
எழுந்து - (ஆகாயத்தில்)எழும்பி, மண்ணினிடை - பூமியிலே,
வீழ்தரும்முன் - விழுவதற்கு முன்னே [மிகவிரைவிலென்றபடி],அகலம்
மார்பு அல்லதை வயங்கு புறம்