பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்89

என்று தெரியான்-(தனது)பரந்த மார்பையே யன்றி விளங்குகின்ற முதுகைக்
காட்டாதவனாகி,-எண்அரிய ஞானம் ஒளி ஆகி-(யாவராலும்)
எண்ணுவதற்கும் அருமையான ஞானமயமான தேஜோரூபியாய்,  வெளி
ஆகி வரும் கருணைபுண்ணியன் ஆன - வெளியிற் காணப்பட்டுவருகிற
திருவருளையுடையபரிசுத்த மூர்த்தியான, எயினர்பதி-(சிவபிரானது
உருவமாகிய)வேடர் தலைவன்,மகிழ்ந்து உருக-(தன்னைக்கண்டு)களித்து
மனம் உருகும்படி, நின்று-முன்னே நின்று, ஒலியுடன் - ஆரவாரத்துடனே,
பழைய பூசல் பொர எண்ணி-முன்செய்த மற்போரை (மீண்டுஞ்) செய்ய
நினைத்து,எதிர்வான்-எதிர்ப்பவனானான்;(எ-று.)

     சிவவேடன் தன்னைத்தூக்கி வானத்தி லெறியவும், அப்போதும்
அருச்சுனன் சிறிதும் பின்வாங்காது மீண்டும் முன்போலப் போர் செய்ய
எண்ணி ஆரவாரித்து எதிர்ப்பவனாயினனென்க. வெளியாகி-ஆகாச
ரூபமாய்; அருவமாகி என்றுமாம்.  மார்பமுகமல்லதை என்றும் பாடம், (112)

113.-சிவபிரான்அருச்சுனனுக்குப் பிரதியக்ஷமாதல்.

வெய்யகணநாதர்கணதேவர் விபுதாதியர் விரிஞ்சிசிவயோ
                                      கியரருஞ்,
செய்யசுடரோனளகையாதிபதிகின்னரர்கள்சித்தர்பலசாரணர்
                                        மணிப்,
பையரவினாடிபுருகூதனிவர்சூழ்தரவொர்பச்சைமயில்
                                  பாதியு டனே,
துய்யவிடைமீதொருசெழுஞ்சுடரெழுந்தது தொழுந்தகைய
                                  தாகுமளவோ.

     (இ-ள்.) (அந்தச் சமயத்தில்), வெய்ய கண நாதர் - (பகைவர்களுக்குப்)
பயங்கரமான பிரம தகணங்களுக்குத் தலைவர்களும், கணதேவர்-பிரம
தகணங்களாகிய, தேவர்களும், விபுதஆதியர் - மற்றைத் தேவர்
முதலியோரும்,
விரிஞ்சி - பிரமனும், சிவயோகியர் - சிவவிஷயமான
யோகாப்பியாசத்தையுடைய முனிவர்களும், அரு செய்ய சுடரோன் -
(காணுதற்கு) அருமையான சிவந்த கிரணங்களுடைய சூரியனும், அளகை
ஆதிபதி - அளகாபுரிக்கு அரசனான குபேரனும், கின்னரர்கள் -
கின்னரர்களும், சித்தர்-சித்தர்களும், பல சாரணர் - அநேகசாரணர்களும்,
மணி பை அரவின் ஆடி - மாணிக்கத்தையுடைய படத்தையுடைய
பாம்பின்மீது ஆடின திருமாலும், புருகூதன் - இந்திரனும், இவர் - என்கிற
இவர்கள், சூழ்தர - (தன்னைச்சுற்றிலும்) நிற்கும்படி, துய்ய விடை மீது-
பரிசுத்தமாகிய ரிஷபத்தின்மேல், ஒரு செழு சுடர்-(எல்லாஒளிகளினும்)
மேம்பட்டதொரு ஒளியுருவம், ஒர் பச்சை மயில் பாதியுடனே-பசுநிறமுள்ள
மயில்போலுஞ் சாயலையுடைய உமாதேவியின் உருவமான
இடப்பக்கத்துடனே, எழுந்தது - தோன்றிற்று; தொழும் தகையது ஆகும்
அளவுஓ-(அது) வணங்கத்தக்க தன்மையுடையதோ?  [வணங்குதற்கு
அரியதென்றபடி]; (எ-று.)

     பின்னும் அருச்சுனன் மற்போரில் எதிர்க்க வர, அப்போது
பிரமதகணங்களும் தேவகணங்களும் முனிகணங்களும் சூழ்ந்