இவ்வாறு,வந்த அரசர்கள் கூறினார்கள். ஆளுகையைக் குடையென்றல், கவிமரபு. கர்ணன் - பாண்டவர்கள் தாயாகிய குந்தி தேவி கன்னிகையாயிருக்கும்போது தனக்குத் துருவாசமுனிவர் உபதேசித்த மந்திரத்தைப் பரீட்சிக்கும்பொருட்டுச் சூரியனை நினைத்து அம்மந்திரத்தை உச்சரிக்க, உடனே அத்தேவன் வந்து அவளுக்கு அனுக்கிரகித்ததனால், அவளிடம்பிறந்த புத்திரன்; இவனைப் பிறந்தபொழுதே குந்தி மானத்துக்கு அஞ்சி ஒரு மிதக்கும் மரப்பெட்டியில் வைத்துப் பூட்டிக் கங்கையாற்றில் விட்டுவிட, அதனைத் திருதராட்டிரனது தேர்ப்பாகன் கண்டு எடுத்துத் திறந்துபார்த்துக் கொண்டுபோய்த் தன் மனைவியாகிய ராதையும் தானுமாக வசுசேனனென்று பேரிட்டு வளர்த்தான்: இவன் பின்பு துரியோதனனுக்குப் பிராணசினேகிதனாகி, அவனருளால் அங்கதேசத்துக்கு அரசனாயினான். சுயோதனன்=ஸு யோதநன்: நல்ல வெற்றியைத் தருகிற யுத்தத்தையுடையவன் என்று பொருள். வானவர் - வானுலகத்துள்ளவர். போது=பொழுது: மரூஉ.(11) 12.-இதுவும் அடுத்த கவியும் - குளகம்: அங்ஙனஞ்சொல்லியவரதுசினம்மூண்ட வார்த்தையைக் கேட்டுஸ்ரீக்ருஷ்ணன் சொல்லலுறுதல். உந்தவுந்த வொருவர்க்கொருவர்வாய் முந்தமுந்த முடுகுசினத்தராய் அந்தவந்த வவனிபர்யாவரும் இந்தவிந்த வுரைகளியம்பவே. |
(இ-ள்.) அந்த அந்த அவனிபர் யாவர்உம் - அந்தந்த அரசர்களெல்லோரும், உந்த உந்த-(பாண்டவர்களுக்கு வந்த அவமானமானது தங்களைப்பிடித்து) இடைவிடாமல் முன்னே தள்ளுதலால், முடுகு சினத்தர் ஆய் - பொங்கியெழுகின்ற கோபத்தையுடையவர்களாய், ஒருவர்க்கு ஒருவர் வாய் முந்த முந்த - ஒருத்தரைக்காட்டிலும் ஒருத்தருக்கு வாய்ச்சொல் மிகவும் முற்பட, இந்த இந்த உரைகள் இயம்ப - இந்த இந்த (கீழ்க்கூறிய) வார்த்தைகளைச் சொல்ல,-(எ-று.) - "கேட்டிருந்தருள் கேசவன்.... ....மகீபர்க்குரைசெய்வான்"என்றுஅடுத்த கவியோடு முடியும். ஒருவர்க்கு - நான்கனுருபு, எல்லைப்பொருளது. வாய் - அதிலிருந்து வருகிற சொல்லுக்கு இடவாகுபெயர்: கருவியாகுபெயரென்றுங் கூறலாம். அவனிபர் - பூமியைக்காப்பவர். மூன்றாமடியில், அந்த வந்த என்றும் பிரிக்கலாம். (12) 13. | கேட்டிருந்தருள் கேசவன்வாசவன் காட்டிருந்தன னென்னக்கவின்பெறுந் தோட்டிருந்தளி தேனுகர்சோலையின் மாட்டிருந்த மகீபர்க்குரைசெய்வான். |
|