அறுகம் புல்லையும் சமர்ப்பிக்க (அதனால் அத்திருமுடியில்) விளங்குகிற புதிய பூக்களையெல்லாம், மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவம் வேடன்-சத்தியமானது ஓருருவத்தையெடுத்தாற்போன்ற கருநிறமுடைய தவத்திற்குரிய கோலத்தையுடைய அருச்சுனன், இணை விழி மலர் பரப்பி- (தனது) தாமரைமலர்போன்ற இரண்டு கண்களையும் நன்றாகவிழித்துப்பார்த்து, மகிழா - களித்து, - (எ-று.)- 'தொழா' என மேலிற்கவியில் தொடரும். 'தன்னோடுபோர்புரியவந்த வேடுவன் சிவபிரான்'என்பதை முடியிற்சாத்தப்பட்டுள்ள கொன்றைமலர் அறுகம்புல் முதலியவற்றால் நிச்சயமாயறிந்து அருச்சுனன் பெருமகிழ்ச்சியடைந்தன னென்க. கந்யாஎன்னும் வடமொழித் திரிபாகிய கன்னியென்னும் பெயர்ச்சொல் - இங்கே இளமையென்ற பொருளைத்தந்தது. சைவம்-சிவனைத் தெய்வமாகக்கொள்ளும் மதம்;தத்திதாந்த வடமொழி. சைவமுறை- சிவாகமம்: முறை-நூல். வேடன் என்ற சொல்-தமிழ்மொழியாய் வேட்டுவன் என்ற பொருளிலும், வடமொழியாய் வேஷத்தையுடையவன் என்ற பொருளிலும் வந்துள்ள நயம் பாராட்டற்பாலது. சாத்தி-சாத்த. (114) 115.- | தும்பைவகைமாலைசெறிவில்லமொடுகொன்றைமலர்சூத மறுகேகமழ்தருஞ், செம்பவளவேணிமிசைதிங்கணதி சூடியருள்செம் பொன்வடமேருவனையான், உம்பர்மணியாழினொடு தும்புருவுநாரதனு முருகியிசைபாடவருள்கூர், அம்பையுடனேவிடையின்மீதொளிரநின்றதனையஞ்சலி செய்தன்பொடுதொழா. |
(இ-ள்.)தும்பை - தும்பைப்பூவினாலாகிய,வகை-பலவகைப்பட்ட, மாலை- மாலைகளும்,செறி வில்லமொடு - நெருங்கிய பில்வபத்திரங்களும், கொன்றைமலர் - கொன்றைப்பூக்களும், சூதம் - மாந்தளிர்களும், அறுகு - அறுகம் புற்களும், கமழ் தரும்-வாசனைவீசப்பெற்ற, செம் பவளம் வேணிமிசை-பவழம்போலச் சிவந்த சடையின்மேல், திங்கள் நதி சூடியருள் - சந்திரனையும்கங்காநதியையும் தரித்தருளிய, செம் பொன் வட மேரு அனையான்-சிவந்தபொன்மயமான வடக்கிலுள்ள மகாமேருமலையை ஒத்தவனாகியபரமசிவன், உம்பர் - தேவர்கள்கேட்பதற்குரிய, மணி யாழினொடு-அழகியவீணையின்இசையுடனே, தும்புருவும்-,நாரதனும்-, உருகி - மனமுருகி, இசைபாட - கீதத்தைப்பாடாநிற்க, அருள் கூர் அம்பையுடனே - கருணைமிகுந்தஉமாதேவியுடனே, விடையின் மீது - விருஷபத்தின்மேல், ஒளிர நின்றதனை- விளக்கமாக எழுந்தருளித் தரிசனந் தந்துநின்ற திருக்கோலத்தை, அஞ்சலிசெய்து - கைகூப்பிவணங்கி, அன்பொடு - பக்தியுடனே, தொழா - நமஸ்கரித்து,-(எ-று.)-'ஆடினன்' என மேற்கவியோடு தொடரும். தனக்குச்சிவபிரான் உமாதேவியோடு விருஷபவாகனத்திற் பிரதியட்சமானது கண்டு பெருமகிழ்ச்சி யடைந்த அருச்சுனன் கைகூப்பி வணங்கிப் பேரன்போடு நமஸ்கரித்தன னென்பதாம்;தும்பைமாலை முதலியவற்றைச் சிவபிரான் முடியிலணிந்துள்ளன |