பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்95

கிளத்தல்"என்னுந் தொல்காப்பியவிதிக்கு ஏற்ப, 'தருமனுக்கநுசனாயினேன்
பரம்பொருளுக்கு நண்புமாயினேன்'என உம்மையில்லாத சொல் முன்
சொல்லப்பட்டது.                                       (121)

122.-இவ்வாறுசொன்னஅருச்சுனனைச்சிவபிரான்
தழுவுதல்.

என்றுகொண்டிம்முறை யிவனியம்பவே
மன்றலங்கொன்றையம் மாலைமௌலியான்
ஒன்றியதவம்புரி யும்பர்தம்பிரான்
தன்றிருமதலையைத்தழுவினானரோ.

     (இ - ள்.)என்று-, இ முறை - இவ்விதமாக, இவன்-அருச்சுனன்,
இயம்ப - சொல்ல, -மன்றல் - வாசனையையுடைய,அம் - அழகிய,
கொன்றைமாலை-கொன்றைப்பூமாலையைச்சூடிய,மௌலியான் -
திருமுடியையுடைய சிவபெருமான், ஒன்றிய தவம் புரி உம்பர் தம் பிரான்
தன் திருமதலையை- பொருந்திய தவத்தைச் செய்த தேவராஜகுமாரனான
அருச்சுனனை,தழுவினான்- கட்டிக் கொண்டான்;(எ - று.)

     இயம்பத்தழுவினானென்க,கொண்டு-அசை. அம்-சாரியையுமாம்.

123.-சிலமொழிந்துசிவபிரான் அருச்சுனனைத்
தேற்றுதலுறுதல்.

தழுவினன்பெருந்துய ரகற்றித்தண்ணளி
பொழிதருகண்ணினன் புரக்குஞ்சிந்தையன்
அழிவறவொழிவற வமர்ந்தசோதியன்
பழுதறுமொழிசில பகர்ந்துதேற்றினான்.

     (இ - ள்.)அழிவு அற - (எப்பொழுதும்) அழிதலில்லாமலும், ஒழிவு
அற-நீங்குதலில்லாமலும், அமர்ந்த-(இயற்கையாகப்) பொருந்திய, சோதியன்
- ஒளியையுடைய சிவபெருமான்,-தண் அளி பொழி தரு கண்ணினன் -
குளிர்ந்த கருணையைச்சொரிகின்ற திருக் கண்களையுடையவனும்,புரக்கும்
சிந்தையன் - (அருச்சுனனைக்)காத்தருளவேண்டுமென்கிற திருவுள்ளத்தை
யுடையவனுமாய், தழுவினன்- (அவனை)அணைத்துக்கொண்டு,பெரு துயர்
அகற்றி - (அதனால்அவனது) மிகுந்த துன்பங்களைப்போக்கி, பழுது அறு
சில மொழி பகர்ந்து - குற்றமில்லாத சில வார்த்தைகளைச்சொல்லி,
தேற்றினான்-(அவனைச்)சமாதானப் படுத்துபவரானார்;(எ - று.)- அதனை
மேல் நான்குகவிகளிற் காண்க.

     பெருந்துயர்என்றது-தவஞ்செய்ததனாலும்போர் செய்ததனாலும்
உண்டான இளைப்பை. தேற்றினான்என்றது -
துரியோதனாதியராலுண்டானதுன்பத்தினின்றும், பரமசிவனைத்தான்
அடித்ததனாலானஅச்சத்தினின்றுந் தேறப் பண்ணுதல்.           (123)