பக்கம் எண் :

100பாரதம்விராட பருவம்

     முதலிரண்டடிகளிலுள்ள 'என்று' என்னுஞ் சொல்லெல்லாம் -
எண்ணிடைச்சொல்.  பூமியைச் சூழ்ந்துள்ள கடலைப் பூமிதேவியுடுக்கும்
ஆடையென்றல், கவிசமயம்.  நான்காம்அடியில், என்று-சூரியன்:
(இயற்கையிலேயே) ஒளியையுடையது என்று காரணப்பொருள்படும்.  நதீ,
அவநி-வடசொற்கள்.  அவநி-பாதுகாக்கப்படுவதென்க.               (163) 

5.-பாண்டவர்வசிக்கிற நாடுஇவ்விதமாயிருக்குமென்று
வீடுமன் கூறல்.

முன்னொற்றையிருசங்கமுடனூதவெதிர்சென்றுமுனைவெல்லுமா
மன்னொற்றரிதுகூறமந்தாகினீமைந்தன்மகன்மைந்தனுக்கு
உன்னொற்றருணர்தற்குவருமோவறன்காளையுறைநாடுகார்
மின்னொற்றுமழையுண்டுவிளைவுண்டெனத்தேடும்விரகோதினான்.

      (இ -ள்.) முன்-முன்னே, ஒற்றை-ஊதுகொம்புகளும், இரு சங்கம்-
(வலம்புரி இடம்புரி என்னும்) இருவகைச் சங்குகளும், உடன்ஊத-ஒருசேர
ஊதாநிற்க, எதிர் சென்று-(பகைவர்களை) எதிர்த்துப்போய், முனை வெல்லும்-
போரிற் சயிக்கின்ற, மா மன் - பெரிய அரசனான துரியோதனனது, ஒற்றர் -
வேவுகாரர்கள், இது கூற - இவ்வார்த்தையைச்சொல்ல,-மந்தாகினீ மைந்தன் -
கங்கையினது புத்திரரராகிய பீஷ்மர்,-மகன் மைந்தனுக்கு - (தமது)
பௌத்திரனாகிய துரியோதனனுக்கு,-'அறன் காளை உறை நாடு -
தருமபுத்திரன் (மறைந்து) வசிக்கின்ற தேசம், உன் ஒற்றர் உணர்தற்கு வரும்ஓ
- உனது ஒற்றர்கள் அறியக்கூடுமோ? (அது) மின் ஒற்றும் கார் மழை உண்டு -
மின்னல்கள் பொருந்திய மேகங்கள் பெய்கின்ற (மிக்க) மழையுள்ளதாகும்;
விளைவு உண்டு - (நல்ல) விளைவுள்ளதாகும்,' என - என்று, தேடும் விரகு-
(பாண்டவர்களிருக்கின்ற இடத்தைத்) தேடிக் கண்டறியத்தக்க உபாயத்தை,
ஓதினான்-சொன்னார்; (எ - று.)

     பிரமனது சாபத்தால் வருணன் குருகுலத்திலே சந்தனுமகாராஜனாய்ப்
பிறந்தான்.  அவனுக்கு முதல்மனைவியான கங்கையினிடத்து
வசிஷ்டமுனிவர்சாபத்தால் (அஷ்டவசுக்களுட்) பிரபாஸனென்னும்வஸு
பீஷ்மனாகத்தோன்றியதனால், 'மந்தாகினீ மைந்தன்' எனப்பட்டான்.  அதன்
விவரம:-முன்ஒருகால்தேவர்கள்யாவரும் கூடிய பிரமதேவனது சபையிற்
சென்று கங்காநதியின் பெண்தெய்வம் வணங்கியபொழுது, அங்குவந்திருந்த
வருணன், அவளழகை உற்றுநோக்கிக் காதல்கொண்டான்; கங்கையும்
அவன்மீது காதல்கொண்டு எதிர்நோக்கினாள்; அதனையறிந்த
நான்முகக்கடவுள், வருணனைப் பூமியில் மானுடப்பிறப்பெடுக்கவும், கங்கையை
மானுடமகளாய் அவனைச் சிலநாள் மணந்திருக்கவும் சபித்திட்டான்;
அங்ஙனமே வருணன் குருகுலத்திற் சந்தனுவாய்ப் பிறந்தான்: கங்கையும் ஒரு
மானிட மகளாகி 'யான் எந்தெந்தத் தீச்செயல்செய்யினும் மறுக்கலாகாது'
என்னும் நிபந்தனையோடு அவனை மணஞ்செய்து கொண்டாள்.  இது நிற்க;
பிரபாசனென்னும்வசு, தன் மனைவியின் சொல்லைக்கேட்டு,
வசிட்டமுனிவனிடமுள்ள காமதேனுவைக்