சேனை'குருசேனை' எனப்பட்டது. 'முன்னிட்ட குருசேனை பின்னிட்டது' - தொடைமுரண். உள் வைகும் என இயையும். பேடி - பெண்ணுறுப்பு மிக்கு ஆணுறுப்புக் குறைந்த நபும்ஸகம்; ஆணுறுப்புமிக்குப் பெண்ணுறுப்புக் குறைந்த நபும்சகம், அலியெனப்படும்; 'பேடு' என்பது, இவ்விருவகைக்கும் பொதுப்பெயர். கொட்புஏறி - மாறுபாடு மிக்கு எனினுமாம். பூபாலன் - பூமியைக்காப்பவன்; வடசொல். பெட்பேறுதல் - நான்முன்னே நான் முன்னேயென்று போர்விருப்பங்கொண்டு புறப்படுதல்; "போரெனிற்புகலும் புனைகழன்மறவர்" என்றார் பிறரும். (171) 13.-திரிகர்த்தராசன்விராடராசன்மேல் அம்புமழைபொழிதல். மெய்க்கொண்டபுண்ணோடுதன்சேனைநில்லாமல்வென்னிட்டபின் கைக்கொண்டநிரையைக்கடத்திப்பொலம்பொற்கழற்காலினான் செய்க்கொண்டகழுநீரலங்கற்கரந்தைத்திருத்தாமன்மேன் மைக்கொண்டலெனவில்வளைத்தாறுபத்தம்புமழைசிந்தினான். |
(இ -ள்.) பொலம் பொன் கழல் காலினான் - அழகிய பொன்மயமான வீரக்கழலைத் தரித்த காலையுடையவனான திரிகர்த்தன்,-தன்சேனை-, மெய் கொண்ட புண்ணோடு - உடம்புமுழுவதும் ஆயுதம்பட்ட விரணத்துடனே, நில்லாமல் - எதிர்நிற்கமாட்டாமல், வென்இட்டபின் - முதுகு கொடுத்து ஓடியபின்பு, - கைக்கொண்ட நிரையை - (தான்) கவர்ந்து கொண்ட பசுக்கூட்டத்தை, கடத்தி - (அப்பாற்) செல்லவிட்டு,-மை கொண்டல் என - கரியமேகம்போல, வில் வளைத்து-வில்லை வளைத்து (நாணேற்றி),-செய் கொண்ட கழுநீர் அலங்கல் - வயல்களிலே தோன்றிய செங்கழுநீர் மலர்களாலாகிய மாலையையும், திரு கரந்தை தாமன்மேல் - அழகிய கரந்தைப் பூமாலையையுமுடையவனான விராடன்மேல், ஆறு பத்து அம்பு - அறுபது பாணங்களை, மழை சிந்தினான் - மழைபோலப் பொழிந்தான்; (எ - று.) அம்புதொடுத்தற்கு மழைபொழிதலும், வில்லுக்கு இந்திர தனுசும், திரிகர்த்தனுக்கு மேகமும் உவமை. செங்கழுநீர்மாலை - விராடனுக்கு உரிய அடையாளப்பூமாலை. கரந்தை - ஓர்செடி; இப்பூமாலை, பகைவர்கவர்ந்து ஓட்டியநிரையை மீட்பவர் தரிப்பது. புண்ணோடு - மூன்றனுருபு, அடைமொழிப்பொருளது. மைக்கொண்டல் - காளமேகம். கொண்டல் - நீர்கொண்டமேகம். ’வயலை 'செய்' என்பது திசைச்சொல். கழனிகளிற் செங்கழுநீர் மலர்கின்ற தென நீர்வளச்சிறப்புக் கூறியவாறாம். (172) 14.-விராடன்அம்புசெலுத்தித் திரிகர்த்தனைத் தேர்முதலியன அழித்தல். மாமச்சவுடல்புன்புலான்மாறிவண்காவிமணநாறுமக் கோமச்சவளநாடனுங்கொற்றவரிவிற்குனித்தைந்துசெந் தாமச்சரங்கொண்டுதேர்பாகுகொடிவாசிதனுவுந்து ணித்து ஆமச்சமுறமற்றவன்கோலமார்பத்துமம்பேவினான். |
|