(பெரிய)மலைகளால், உயர் நகங்களை - உயர்ந்த மலைகளை, நறுக்கும் ஆ போல-நொருக்கும் விதம்போல,-திகத்த பூபதி-திரிகர்த்த தேசத்தரசனது, தேரினை-, வேறு ஒரு தேரால்-, தகர்த்து - நொருக்கி, அவன் தனைஉம் - அத்திரிகர்த்தனையும், வில்லொடுஉம் - வில்லுடனே, அகப்படுத்தினன் - அகப்படச்செய்தான் [வில்லுங்கையுமாய்த் திரிகர்த்தனைப் பிடித்துக்கொண்டா னென்றபடி]; வீமனுக்கு வாயுவும், தேர்க்கு மலையும் உவமை. தந்தையே மைந்தனாகின்றா னென்னும் வேதவழக்குப்பற்றி வீமனுக்கு வாயுவை உவமை கூறினார். "தந்தையரொப்பர்மக்கள்" என்றார் தொல்காப்பியனாரும். கற்பாந்தகாலத்திற் பெருங்காற்று எழுந்து வீசி உலகங்களை யழிக்கு மென்க.(176) 18.-பலாயனன் விராடனைமீட்டு அவனது தேர்க்காலில் திரிகர்த்தனைக் கட்டுதல். வீரியந்தனக்கொருவனாம்விராடனையொருபொன் தேரிலேறுகென்றேற்றியத்தேரினிற்றிகத்தன் சோரிபாய்தடந்தோள்களைவடத்தினாற்றுவக்கி மூரியேறெனமீண்டனன்முறிந்ததச்சேனை. |
(இ -ள்.) (இவ்வாறு அகப்படுத்தி),-வீரியந்தனக்கு ஒருவன் ஆம் விராடனை - வீரத்தன்மையில் ஒப்பில்லாதவனாகிய விராடராஜனை, ஒரு பொன் தேரில் ஏறுக என்று - 'பொன்மயமான வேறொரு தேரிலே ஏறுவாயாக' என்று சொல்லி, ஏற்றி - (கட்டவிழ்த்து) ஏறவிட்டு,-அ தேரினில் - அந்தத்தேரிலே, திகத்தன்-திரிகர்த்தராசனது, சோரி பாய் தடதோள்களை - இரத்தம் பெருகுகின்ற பெரிய புஜங்களை, வடத்தினால் துவக்கி - (விராடனைக் கட்டிய) கயிற்றினாலேயே கட்டிவிட்டு,-மூரி ஏறு என - வலிமையுள்ள விருஷபம் போல [கம்பீரமாக], மீண்டனன் - (பலாயனன்) திரும்பி வந்தான்; (இதுசெய்யவே),-அ சேனை - அந்தத்திரிகர்த்தசேனை, முறிந்தது - அழிந்து போயிற்று; (எ -று.)-ஏறுகென்று வியங்கோளீற்று அகரம் தொகுத்தல். (177) 19.-விராடன் பலாயனனுக்குநன்றியறிவு கூறல். பொருமுகத்தினிற்பகைவனைப்புயமுறப்பிணித்து வெருமுகத்தினில்வீடுகொள்வீமனை விராடன் செருமுகத்தினிலெனக்குநீசெய்தபேருதவிக்கு ஒருமுகத்தினுமில்லைகைம்மாறெனவுரைத்தான். |
(இ -ள்.) (இவ்வாறு), பொரு முகத்தினில் - போர்செய்கின்ற களத்திலே, பகைவனை - பகைவனாகிய திரிகர்த்தனை, புயம் உற பிணித்து - தோள்களை அழுந்தக் கட்டிவிட்டு, வெரு முகத்தினில் - (யாவரும்) அஞ்சத்தக்க தோற்றத்துடனே, வீடு கொள் - திரும்பிவருகின்ற, வீமனை - வீமசேனனை நோக்கி, விராடன்-, 'செரு |