பக்கம் எண் :

112பாரதம்விராட பருவம்

முகத்தினில்- யுத்தகளத்தில், எனக்கு நீ செய்த-, பேர்உதவிக்கு - இந்த
மகோபகாரத்திற்கு, கைம்மாறு - (யான் செய்யும்) பிரதியுபகாரம்,
ஒருமுகத்தினும் - ஒருவகையிலும், இல்லை-,' என உரைத்தான் - என்று
சொன்னான்; (எ - று.)

     காலத்திற் செய்த நன்றி ஞாலத்தினும் மிகப்பெரிய தாதலால், நான் எந்த
உபகாரஞ் செய்தபோதிலும் நீ செய்த பெரிய உபகாரத்துக்கு ஈடாகாதென்றபடி.
பலாயனன் செய்த உபகாரம்-தன்னை மாற்றானிடத்தினின்று விடுவித்து,
மாற்றானைத் தன்தேர்க்காலிற்கட்டி அகப்படுத்தியது.  வீடுகொள் - தன்னை
விடுவித்த என்றுமாம்; (பகைவரைக்) கொல்லுகின்ற என்று உரைப்பாருமுளர்.

                                                          (178)

20.-தாமக்கிரந்திதிரிகர்த்தசேனைக்கதிரைகளைக் கவர்தலும்,
தந்திரிபாலன் நிரைமீட்டலும்.

சேவலானெனத்தயித்தியனனையவத்திகத்தர்
காவலானையக்கான்மகன்பிணித்தமைகண்டு
மாவலான்வயமாப்பதினாயிரம்வௌவக்
கோவலானவன் கொண்டகோமீளவுங்கொண்டான்.

      (இ -ள்.) (அப்பொழுதும்),-அ கால் மகன் - வாயுபுத்திரனான அவ்
வீமசேனன், சேவலான் என - கோழிக்கொடியையுடையவனான முருகக்கடவுள்
போல, தயித்தியன் அனைய அ திகத்தர் காவலானை - அசுரனைப்போன்ற
அந்தத் திரிகர்த்ததேசத்தார்க்கரசனை, பிணித்தமை-கட்டியதை, கண்டு-, மா
வலான் - குதிரைசெலுத்துந்தொழிலில் வல்லவனாகிய (தாமக்கிரந்தியென்னும்
பெயர்பூண்ட) நகுலன், வயமா பதினாயிரம் வௌவ - (திரிகர்த்த சேனை
யிலுள்ள) வலிய பதினாயிரங்குதிரைகளைக் கவர்ந்துகொள்ள,-கோவலான் -
பசுக்களைப் பாதுகாக்குந்தொழிலில் வல்லவனாகிய (தந்திரிபால
னென்னும்பெயர் கொண்ட) சகதேவன், அவன் கொண்ட கோ-திரிகர்த்தன்
கொண்டுபோன பசுக்களை, மீளவும் கொண்டான் - திருப்பி (ஊருக்கு)
ஓட்டினான்; (எ - று.)

     இதனால் பாண்டவர்நால்வர் விராடனுக்கு உதவியமை கூறியவாறு.  இது,
இப்படலத்துக்கு உயிர்நிலைச்செய்யுள்;நிரைமீட்டல் கூறுகின்றமையின்.
உரிமைபற்றி, மாவலான் மாவௌவக் கோவலான் கோக்கொண்டானென்க.
பலபராக்கிரமங்களிலும் அழகியவடிவிலும் தேவாமிசமாதலிலும்
எளிதிற்பகையழித்தலிலும் வீமனுக்கு முருகக்கடவுளும், அவனால் எளிதில்
அழிக்கப்படுதலிலும் நல்லோர்க்குப் பகையாய்க் கொடுந்தொழில் செய்தலிலும்
திரிகர்த்தனுக்கு அசுரனும் உவமையாவர்.  சேவல்-ஆண்பாற்பெயர்; இனி,
சேவலான்-மயில்வாகனமுடையவ னென்றுமாம்.  ஆசிரியர் தொல்காப்பியனார்
"மாயிருந்தூவி மயி லலங்கடையே" என்றாராயினும், உரைகாரர்
'செவ்வேளூர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும்படுமென்பது' என்றமை காண்க.
முருகக்கடவுளால் வேல்கொண்டு பிளக்கப்பட்ட சூரபதுமனது உடம்பின் கூறு
இரண்டும் மயில்வடிவமும் கோழி