பக்கம் எண் :

126பாரதம்விராட பருவம்

39.-பிருகந்நளைதேற்றவும் உத்தரன் தேறாது ஓடிவிடப் பார்த்தல்.

தூண்டுமாவிவைசொரிமதக்களிறிவைதுரங்கம்
பூண்டதேரிவைபதாதிமற்றிவையெனப்புகல
ஈண்டுநின்றவையாவையுமியாவெனத்தெரியா
மீண்டுபோவதேயுறுதியென்றனனிகல்வீரன்.

     (இ -ள்.) 'தூண்டும் மா இவை - செலுத்தப்படுகின்ற குதிரைகள் இவை:
சொரி மதம் களிறு இவை - பொழிகின்ற மதசலத்தையுடைய யானைகள் இவை:
துரங்கம் பூண்ட தேர் இவை - குதிரைகள் பூட்டிய தேர்கள் இவை: பதாதி
இவை - காலாட்சேனைகள் இவை', என - என்று, புகல - (பேடி
சதுரங்கசேனையைக்காட்டி எடுத்துச்) சொல்ல,-இகல் வீரன் - வலிய
வீரத்தன்மையையுடையவனான உத்தரன், ஈண்டு நின்றவை யாவைஉம் -
இங்குப் பொருந்தியவை யெல்லாவற்றையும், யா என - எவை [இன்னவை]
யென்று, தெரியா - தெரிந்துகொள்ளாமல், 'மீண்டு போவதுஏ - திரும்பிச்
சென்றுவிடுவதே, உறுதி - துணிவான காரியம்,' என்றனன் - என்று
சொன்னான்; (எ - று.)

      இவன்படையின் தன்மை கண்டறியா னென்று, பேடி, குதிரை முதலியன
இவைஇவை யெனச் சொல்லிக்காட்டினன்:  காட்டவும் அச்சமிகுதியால்
அச்சொல்லைச் செவியினாலேற்காமல், உத்தரன் இங்குநின்றால் உயிர்தப்புவது
அரிது என்று கருதி மீண்டுபோவதே யுறுதியென்றான்.  உத்தரனை 'இகல்
வீரன்' என்றது, இகழ்ச்சி.

     துரங்கம் - விரைவாய்ச் செல்வது என்று பொருள்படும் வடசொல்.
'பதாதி' என்ற வடசொல்லுக்கு - கால்களினாலே நடந்து செல்பவனென்பது
பொருள்: இங்கு 'பதாதி' என்றது - காலாள்களின் கூட்டத்தை யுணர்த்தி
அஃறிணையின்பாற் பட்டதனால், 'பதாதி யிவை' எனப்பட்டது. மற்று - அசை.
                                                      (198)

40.-பிருகந்நளை உத்தரனுக்குச் சைத்தியோபசாரஞ் செய்து,
'யான் பொருது பகைவெல்வேன்' எனல்.

வெயர்த்தமேனியைநறும்பனிநீரினால்விளக்கி
அயர்த்துநீமுதுகிடாதொழியிமைப்பொழுதையா
உயர்த்தபல்கொடிப்பகைஞரைத் தனித்தனியோட்டிப்
பெயர்த்துநல்குவேனிரையுமென்றுரைத்தனள்பேடி.

      (இ -ள்.) (பின்பு), பேடி-,-வெயர்த்த மேனியை-(அச்சத்தினால்)
வேர்வையடைந்த (உத்தரனது) உடம்பை, நறும் பனி நீரினால் விளக்கி -
வாசனைவீசுகின்ற பனிநீரைத் தெளித்துத் துடைத்து (அயர்ச்சியைப்போக்கி)த்
தேற்றி,(அவனை நோக்கி), 'ஐயா - தலைவனே! நீ -, இமைபொழுது -
ஒருக்ஷணகாலம், அயர்த்து முதுகு இடாது ஒழி - தளர்ந்து முதுகு கொடுத்து
ஓடாமலிரு; (நான்) உயர்த்த பல் கொடி பகைஞரை - உயர எடுத்த பலவகைத்