பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 139

பேடியை - மிக்கவலிமையையுடைய பெரிய பேடியை, தேர்மிசை கண்டு-
தேரின்மேற்பார்த்து, மிண்டுவீர்-நெருக்கிப் போர்செய்வீர்,' என கூறி-என்றுஞ்
சொல்லி,- மீண்டான்-(போர்க்களத்துக்குத்) திரும்பினான்; (எ - று.)

     'தானும்' என்றது, கர்ணனைப்போலவே இந்தத் துரியோதனனும்
மனநிலைகொண்டு கூறினானென்பதைப் புலப்படுத்தும்.  போக, நிற்க -
வியங்கோள் முற்று.  போக என்பதைச் செயவெனெச்சமாகக் கொள்ளினுமாம்.
அனைவரும் = அனைவீரும்: முன்னிலையிற்படர்க்கைவந்த இடவழுவமைதி.
நிற்கென - அகரம் தொகுத்தல்.                                 (213)

55.-அருச்சுனன் வடபுறத்து நிரைமீட்டல்.
      
மானமாமுடிமன்னரை விலக்கிவல்விரைந்து
கோநிரைக்குலங்கொண்டுபோங் கோநிரைதுரந்து
போனபேடிவெம்பூசலும் பொழுதுறப்பொருது
தூநிறத்திளங்கன்றுடைத் தொறுக்களுமீட்டான்.

     (இ - ள்.) (பின்பு), - போன பேடி - (போர்க்குச்) சென்ற பேடியாகிய
அருச்சுனன்,-மானம் மா முடி மன்னரை - மானமுள்ளவர்களும் பெரிய
கிரீடந்தரித்தவர்களுமான பகையரசர்களை, விலக்கி - விலகச்செய்து,-
வல்விரைந்து - மிகவும் விரைவாக, குலம் கோ நிரை கொண்டுபோம் - சிறந்த
பசுக்கூட்டங்களைக் கவர்ந்துபோகின்ற, கோ நிரை - ராஜபரிவாரத்தை, துரந்து
- துரத்திக்கொண்டுபோய்,- வெம் பூசல்உம் - கொடிய போரையும், பொழுது
உற - உரியகாலம் பொருந்த, பொருது - செய்து,- தூ நிறத்து-பரிசுத்தமான
தன்மையுள்ள, இளங் கன்று உடை தொறுக்கள் உம் - சிறுகன்றுகளையுடைய
பசுக்கூட்டங்களையும், மீட்டான் - திருப்பிக்கொண்டுவந்தான்; (எ - று.)

     கீழ் 20 - ஆஞ் செய்யுள்போலவே, இச்செய்யுளும்-வடபுறத்து
நிரைமீட்சி கூறினமையின், இச்சருக்கத்துக்கு
உயிர்நிலைச்செய்யுளாம்.

   
போரில் மிண்டிய வீடுமன் துரோணன் முதலியவர்களையெல்லாம்
விலகச்செய்து பசுநிரையைக் காத்திருந்த அரசவர்க்கத்தையும் விரைவில்
வென்று பசுக்கூட்டத்தைத் திருப்பிக்கொண்டுவந்தனன், அருச்சுனனாகிய
பிருகந்நளை யென்க.  பொழுதுற - சொற்ப காலத்திலென்றபடி:  இனி,
பொழுது உற - அஜ்ஜாதவாசவருஷங்கழிதற்குக் குறைவாய்நின்ற நான்கு
நாழிகைப்பொழுது கழியுமளவுமென்றும், பொழுதுவிடியுமளவு மென்றும்
உரைப்பாருமுளர்.  'மானமா முடி மன்னர்' என்றது - "மயிர் நீப்பின் வாழாக்
கவரிமாவன்னா, ருயிர்நீப்பர் மானம் வரின்" என்றபடி தம்
தலையைக்கொடுத்தாயினும் மானத்தைக் காக்கவல்ல வீர ரென்றவாறுமாம்.
மானமாவது - எப்பொழுதும் தம்நிலையினின்று தாழாமையும், ஊழ்வினையால்
தாழ்வு வந்த விடத்து உயிர்வாழாமையுமாம்.  இனி, மானம் - செருக்கும், தமது
அரசனிடத்து அபிமானமும், பெருமையும்