64.-மீண்டும்அருச்சுனன்உத்தரனைத்தேற்றித் துரியோதனன்மீது தேர்செலுத்தச்சொல்லுதல். தாழ்ந்தவாடையினுயர்கொடித்தண்டுடைத்தேர்மேல் வீழ்ந்தபாகனைமீளவும்விரகுறத்தேற்றிச் சூழ்ந்ததன்பெருந்துணைவனைச்சூதினாற்றுரந்து வாழ்ந்தமன்னன்மேலேவினான்வரிசிலைவல்லான். |
(இ -ள்.) தாழ்ந்த ஆடையின் - தொங்கிய சீலையையுடைய, உயர் கொடி தண்டு உடை - உயர்ந்த [மேலான] துவசதண்டத்தையுடைய, தேர்மேல் - தேரில், வீழ்ந்த - மூர்ச்சித்துவிழுந்த, பாகனை - சாரதியான உத்தர குமாரனை, வரி சிலை வல்லான் - கட்டமைந்த வில்லின் தொழிலில் வல்லவனாகிய அருச்சுனன், மீளஉம் - மறுபடியும், விரகுஉற - பக்குவமாக, தேற்றி - மயக்கந்தெளியச்செய்து,- சூழ்ந்த - (தான்) வஞ்சனையான ஆலோசனைசெய்து வரவழைத்த, தன் பெருந்துணைவனை - தனது பெரிய தமையனாகிய தருமபுத்திரனை, சூதினால் துரந்து - சூதாட்டத்தினால் (ஜயித்து இராச்சியத்தினின்று) துரத்திவிட்டு, வாழ்ந்த - (அவனது) செல்வவாழ்க்கையைத் (தான்) அடைந்த, மன்னன்மேல் - துரியோதனராசன்மேலே, ஏவினான் - (தேரைச் செலுத்தும்படி உத்தரனை) ஏவினான்; (எ - று.) "தாழ்ந்தவாடையினுயர் கொடித்தண்டு" - தாழ்வு, உயர்வு - தொடைமுரண். கொடித்தண்டு - கொடிகட்டுகின்ற மரக்கொம்பு. 'மீளவும்' என்றது - கீழ் நாற்பதாங் கவியில் "வெயர்த்த மேனியை நறும்பனி நீரினால் விளக்கி" என்றதனை நோக்கிற்று. விரகு - உபாயங்களினால், உற தேற்றி - நன்றாகத் தெளிவித்து என்றலுமாம். விரகு உற - அறிவுண்டாக' என்றுமாம். சூழ்ந்த - தம்பியர் நால்வராற் சூழப்பட்ட என்றும், கொடியவிதியினாற் சூழப்பட்ட என்றுங் கொள்ளலாம். பெருந்துணைவன் - யாவர்க்கும் மூத்தவன். 'சூதினால் துரந்து வாழ்ந்த மன்னன்' என்பது, போரினால் வென்று வாழவலிமையில்லாதவனெனக் குறிப்பித்தற்கு. (223) 65.-அங்ஙனமே உத்தரகுமாரன்நன்கு தேர்செலுத்தல். மச்சநாடன்மாமதலையம்மன்னவன்மொழியால் அச்சமற்றிருந்துளவுகோலருணனிற்கொள்ள உச்சவானிடைப்பகலவனூர்ந்ததேர்பூண்ட பச்சைவாசியினோடினசுவேதவெம்பரிமா. |
(இ -ள்.) (அவ்வாறே), மச்சநாடன் மா மதலை - மச்சதேசத்தரசனாகிய விராடனது சிறந்தகுமாரனான உத்தரனும், அ மன்னவன் மொழியால் - அந்த அருச்சுனனது வார்த்தையால், அச்சம் அற்று இருந்து - பயமில்லாதவனாகி [தேறி] (எழுந்து தேரின் முன்னிலையில்) இருந்து, அருணனின் - (சூரியசாரதியாகிய) அருணன்போல, உளவுகோல் கொள்ள - குதிரை தூண்டுங்கோலைக் (கையிற்)கொண்டு சாரத்தியஞ் செய்ய, சுவேதம் வெம் பரிமா - வெண்ணிறமான வேக |