வரைத்,தேவரைப்போலத் தொழுதெழுகவென்பதே யாவருங்கண்டநெறி" என்றபடி தெய்வமாகக் கொண்டாடத் தக்கவ ராதலாலும், இவர்களைக் கொல்லுதல் கொடியபாதகமாகு மென்க; "மாறன்மையின் மறம்வாடுமென் றிளையாரையுமெறியான், ஆறன்மையின் முதியாரையு மெறியா னயிலுழவன்" எனற் சிந்தாமணி இங்கு நோக்கத்தக்கது. அரசன், உபாத்தியாயன்,தாய் தந்தை தமையன் என்ற ஐவரும் - ஐம்பெருங்குரவ ரெனப்படுவர். இரவலர் - இரத்தலில் வல்லவர்: அன்றி, இரவல் அர் - இரக்குந்தொழிலுடையவர். அறிவினாலும் பருவத்தாலும் ஒழுக்கத்தாலும் முதியவர்களாகிய ஞானவ்ருத்தர் வயோவ்ருத்தர் சீலவ்ருத்தர் என்னும் மூவகைப்பெரியோரும் அடங்குவதற்கு, பொதுப்பட 'விருத்தர்' என்றான். என்றிவர் - தொகுத்தல். கோறல் - தொழிற்பெயர். (233) 75.-துரோணர் முதலியோர்அருச்சுனனை வளைத்தல். பற்பலவுரையிவன்பகருமேல்வையில் சொற்பயினான்மறைத்துவசன்வீடுமன் கற்பகநிகர்கொடைக்கன்னனாதியோர் மற்புயநிருபனைவந்துகூடினார். |
(இ -ள்.) பல்பலஉரை - (இவ்வாறு) பலபலவார்த்தைகளை, இவன் பகரும் ஏல்வையில் - இவ்வருச்சுனன் (துரியோதனனை நோக்கிச்) சொல்லி இகழ்கின்றபொழுதில்,-சொல் பயில் நால் மறை துவசன் - (பலர்) சொல்லுதல் பொருந்திய நால்வகைப்பட்ட வேதத்தை யெழுதிய கொடியையுடையவனான துரோணாசாரியனும், வீடுமன் - பீஷ்மனும், கற்பகம் நிகர் கொடை கன்னன் - கல்பகவிருக்ஷம்போன்ற தானத்தையுடைய கர்ணனும், ஆதியோர் - முதலானவர்கள், மல் புயம் நிருபனை - வலிமையுள்ள தோள்களையுடைய அரசனான அருச்சுனனை, வந்து கூடினார் - திரண்டு வந்து வளைந்தார்கள்; (எ - று.) சொல்பயில் - கல்வியைப் பிறர்க்குப்போதிப்பதில் தேர்ச்சியுள்ள என்றலு மொன்று. நான்மறை - இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பன; தைத்திரியம், பௌடிகம், தலவகாரம், சாமம் என்பாரு முளர். மறைத்துவசன் - வேதக்கொடியுடையான். துரோணன் ஆதியில் வீடுமனிடம் வந்துசேர்ந்தபொழுது வீடுமன் துரோணனைக் கௌரவபாண்டவர்க்குப் பிரதானவில்லாசிரியனாக்கி அவனுக்கு இராசபட்டத்தையும் அரசர்க்கு உரிய குடை கொடி சாமரம் தேர் கிரீடம் முதலிய அங்கங்களையும் அளித்தனனாதலின், இவற்குத் துவசம் உரியதாயிற்று. கற்பகம் - கல்பகம்: (வேண்டுவோர் வேண்டுவனவற்றைக்) கல்பிப்பதென்று பொருள்படும்: கல்பித்தல் - உண்டாகச்செய்தல். இது, பிறர் தன்னிடம்வந்து நினைத்தவற்றையெல்லாம் அவர் |