பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 181

என்றார்,மிக்க பாதுகாவலை யுடையதென்றற்கு, 'மாபெருஞ்சேனை' என்றது,
சேனை உருவத்திற் பெரிதாயிருந்தும் வலிமையிற் சிறப்புறாது சிறுமைப்பட்ட
தென்ற இகழ்ச்சிகுறித்தற்குப்போலும்.  வரவர என்ற அடுக்கு -
காலக்கிரமத்திலென்றபடி.                                     (266)

108.-அருச்சுனன் ஆயுதங்களை வைத்திட்டுப்
பேடிவேடங்கொள்ளுதல்.

வேந்தனைமுதுகுகண்டவெந்திறல்வீரன்மீண்டு
போந்துமுன்னெடுத்தவன்னிப்பொதும்பரின்புறத்துவந்து
வாய்ந்தவாயுதங்கள்யாவும்வைத்தெழில்வடிவமாற்றி
ஆந்தகவெண்ணிப்பேடியாயினானென்பமாதோ.

      (இ -ள்.) வேந்தனை முதுகுகண்ட - துரியோதனராஜனைப்
புறங்கொடுத்தோடச்செய்த, வெம் திறல் வீரன் - கொடிய வல்லமையையுடைய
வீரனாகியஅருச்சுனன், முன் போந்து எடுத்த வன்னிபுறத்து மீண்டு வந்து -
முன்புசென்று தான் ஆயுதங்களையெடுத்துக்கொண்ட வன்னிமரத்தி னருகில்
மறுபடியும்வந்து, வாய்ந்த ஆயுதங்கள் யாஉம் பொதும்பரின் வைத்து-(தனக்கு)
ஏற்றவையாயமைந்த (வில்முதலிய) ஆயுதங்களையெல்லாம் (கட்டி)
அம்மரப்பொந்திலே மறைத்துவைத்து விட்டு, எழில் வடிவம் மாற்றி - அழகிய
தனதுமெய்யுருவத்தை யொழித்து, ஆம் தகவு எண்ணிபேடி ஆயினான் -
இனிமேல் ஆகவேண்டிய காரியத்தை ஆலோசித்து முன்போலப் பேடி
வேடங்கொண்டான்; (எ - று.)  - மாதோ - ஈற்றசை.

     'ஆந்தகவெண்ணி' என்றது, பின்னர்த் தருமன் முதலியோருடனே
தானும்ஒருங்குவெளிப்படவேண்டு மென்றுகருதி யென்றவாறு;
ஆந்தகவெண்ணுதல் -இப்போரை உத்தரன்வென்றதாகத் தோன்றுவிக்குங்
கருத்துமாம்.   என்ப -அசை; இனி, என்ப - என்றுசொல்வார் என்று
பலர்பால்முற்றாகக் கொண்டால்,இதற்கு எழுவாய் முதனூலாசிரியராதல்
வேண்டும்.                                                (267)

109.-அருச்சுனனும் உத்தரனும் விராடனகர்க்கு மீளுதல்.

இவ்வெயிலெறிக்கும்பைம்பொனிலங்குதேர்மீண்டுமேகக்
கைவெயிலெறிக்கும்பைம்பூட்காளைதன்றேரிலேறி
வெவ்வெயிலாறும்வண்ணம்விரைந்துபோய்விராடன்மூதூர்
அவ்வெயில்சூழ்ந்தகாவினமர்ந்தனனரசரேறே.

      (இ -ள்.) அரசர் ஏறு - அரசர்கட்கு ஆண்சிங்கம்போன்றவனாகிய
அருச்சுனன்,- வெயில் எறிக்கும் - சூரியனொளிபோன்ற ஒளியை வீசுகின்ற,
பைம் பொன் - பசும்பொன்னினாலாகிய, இலங்கு - விளங்குகின்ற, இ தேர் -
இந்த [அக்கினிபகவான்கொடுத்த] இரதம், மீண்டும் ஏக - திரும்பிச்
சென்றுவிட,- (தான்), - கை வெயி்ல் எறிக்கும் - பக்கங்களில் ஒளியை
வீசுகின்ற, பைம் பூண் - பசுமையான ஆபரணங்களை யணிந்த, காளைதன் -
உத்தரகுமாரனது,