திருமகன் - செல்வப்பிள்ளை. மைதீட்டிய கண்ணுக்கு உவமையாதற் பொருட்டு, விடம்படுவேல் கூறினார். ஏந்தியவரது கோபத்தை வேலின் மேல் ஏற்றி 'வெகுளிவேல்' எனப்பட்டது; 'சினவாள்' என்றாற் போல. (272) 114.-விராடனைக்கங்கபட்டன் தேற்றி, 'பேடி தேரூர்ந்தாளாயின் உத்தரன்வென்று இப்போதே வருவான்' என்றல். சந்தனவளறும்வாசத்தண்பனிநீரும்வீசி வெந்திறல்வேந்தன்றன்னைமெய்ம்மெலிவிருந்துதேற்றி மைந்தனிப்பொழுதேவென்றுவருகுவன்பொற்றேரூர்ந்தாள் அந்தமெய்ப்பேடியாகிலென்றனனந்தணாளன். |
(இ -ள்.) (அப்பொழுது),- அந்தணாளன் - கங்கப்பட்டனென்கிற சந்நியாசியாகிய தருமபுத்திரன்,- இருந்து - (பக்கத்தில்) இருந்து,- சந்தனம் அளறுஉம் - சந்தனக்குழம்பையும், வாசம் தண் பனி நீர்உம் - நறுமணமுள்ள குளிர்ச்சியான பனிநீரையும், வீசி - (அவ்விராடராசன்மீது) தெளித்து, வெம்திறல் வேந்தன் தன்னை - (பகைவர்க்கு)அச்சந்தருகிற வல்லமையையுடைய அவ்வரசனை, மெய் மெலிவு - உடல் மெலிவை [மூர்ச்சித்து விழுந்ததை], தேற்றி - தெளியச்செய்து, 'அந்த மெய் பேடி - உண்மையான அந்தப்பேடி [பிருகந்நளை], பொன் தேர் ஊர்ந்தாள் ஆகில்-அழகிய தேரை யோட்டிக்கொண்டு சென்றனளேயாயின், மைந்தன் - (உத்தர) குமாரன், இப்பொழுதே வென்று வருகுவன் - வெகுவிரைவிலே (பகைவரைச்) சயித்து (நிரைமீட்டு) வருவன்,' என்றனன் - என்று தேறுதல் கூறினான்; (எ - று.) மெய்ப் பேடி - உண்மையன்புடைய பேடி யெனினுமாம்; இத்தொடரில், மெய்யினால் [வடிவுமாத்திரத்தால்] பேடி [வலிமையாற் பேடியன்று] என்ற பொருள் உள்ளுறையாய்த் தோன்றுதல் காண்க: இனி, பொய்ப்பேடித்தன்மையை வெளிப்படாது மறைத்தற்கு 'மெய்ப்பேடி' என்றாருமாம். அழகிய குளிர்ச்சியை அருளை ஆள்பவனென்ற சொல்லாற் கங்கபட்டனை அந்தணாளன்என்று கூறியதில், இங்ஙனம் சைத்தியோபசாரஞ் செய்தும் குளிர்ந்த சொற்களைக்கூறியும் சமயத்தில் தாபசாந்திசெய்தற்கேற்றவ னென்னும் கருத்துத்தோன்றுதலால் கருத்துடையடை கொளியணி. 115.-தூதர் சென்று விராடனிடஞ் செய்திகூறல். அறன்மகன்வாய்மைதேறியரசனாங்கிருந்தவெல்லை மறனுடையுரககேதுவன்சமரழிந்தவாறும் உறமலைந்தொருதன்றேர்கொண்டுத்தரன்வென்றவாறும் தொறுநிரைமீட்டவாறுந்தூதர்போய்த்தொழுதுசொன்னார். |
(இ -ள்.) அறன்மகன் வாய்மை - தருமபுத்திரனது வார்த்தையினால், அரசன் - விராடராசன், தேறி - (சிறிது) தெளிவடைந்து, ஆங்கு இருந்த எல்லை - அவ்விடத்திலிருந்த சமயத்தில்,-தூதர் |