தலைவர்எதிர்கொள்ளவேண்டுமென்பது கூறவே, சேனைகளும் எதிர்கொள்ளுதல் அடங்கும். இனி, சேனைகளும் ஆதிபரும் எனினுமாம். துனி-சோகத்தின்பின் சிறிதுபொழுது நிகழ்வது; அச்சமுமாம்: துனியும் ஆறி என்று எடுத்து உரைக்கவும் இடமுண்டு. ஆதிபர் - விகாரம். (275) 117,- விராடராசன்கொண்ட மிக்கமகிழ்ச்சியைக் கவி இழித்துரைத்தல். சோரர்தங்கருவைத்தங்கள்கருவெனத்தோளிலேந்தி ஆர்வமுற்றுருகுநெஞ்சினறிவிலார்தம்மைப்போல வீரன்வெஞ்சமரம்வெல்லவிராடனுத்தரன்வென்றானப் போரினையென்னாமேனிபுளகெழப்பூரித்தானே. |
(இ -ள்.) சோரர்தம் கருவை - (தம் மனைவியர்பக்கல்) கள்ளப் புருஷராகிய அயலார்க்குப் பிறந்த குழந்தையை, தங்கள் கரு என - தங்கட்குப்பிறந்த குழந்தை யென்று எண்ணி, தோளில் ஏந்தி - (அக்குழந்தையைத் தங்கள்) - தோள்களில் தூக்கிவைத்துக்கொண்டு, ஆர்வம் உற்று உருகும் நெஞ்சின் - (அக்குழந்தையினிடத்து) அன்புகொண்டு இளகுகின்ற மனத்தையுடைய, அறிவு இலார் தம்மைபோல - அறிவில்லாத (சில) ஆடுவரைப்போல,-வீரன் வெம் சமரம் வெல்ல - மகாவீரனான அருச்சுனன் கொடிய போரில் வெற்றிகொண்டவனாயிருக்க, விராடன் -, அ போரினை- அந்த யுத்தத்தை, உத்தரன் வென்றான் என்னா-(தன்மகனான) உத்தரன் ஜயித்தானென்று உட்கொண்டு, மேனி புளகு எழ பூரித்தான் - (மிக்கமகிழ்ச்சியால்) உடம்பு புளகமுண்டாகப் பருத்து நின்றான்; (எ - று.) சோரர்-கள்ளர்; இங்கே, பிறரறியாதபடி வந்து அயலார்க்குரிய மாதரைத் தமக்குரியராக்கிக்கொள்பவர்: வடசொல். கரு-கர்ப்பமென்ற வடசொல்லின் சிதைவு: கருப்பத்தினின்று வெளிப்பட்ட குழந்தையைக் காட்டிற்று. தம்மனைவி பிறர்க்குப்பெற்ற பிள்ளையைத் தம்பிள்ளை யென்று கொஞ்சிக் குலாவிக் கொண்டாடும் பேதையர்போல, விராடன் அருச்சுனனது போர்வெற்றியைத் தன்மகனதுபோர்வெற்றி யென்று மாறுபடக்கருதி உண்மையறியாது மிகமகிழ்ந்தன னென்பதாம்: உவமையணி. உண்மையுணருமிடத்து இவ்வகைத் தகுதியில்லாத மகிழ்ச்சிக்கு இடமில்லையென்பதுபட, 'அறிவிலார்' என்றார்; அறிவிலார் - உண்மை யுணராத பேதையர். ஆர்வமாவது - மனைவியரிடத்தும் தாய் தந்தை புத்திரர் முதலிய சுற்றத்தாரிடத்தும் மனமகிழ்ச்சி நிகழ்த்திப் பிணிப்பித்து நிற்கும் நேயம். புளகு - வடமொழி விகாரம். மேனிபுளகித்தலும், மேனி பூரித்தலும் - மகிழ்ச்சியினாலாகும் மெய்ப்பாடுகள். விராடன் மேனிபூரித்தான் - திணைவழுவமைதி. (276) 118.-விராடநகரத்தார் தமது நகரத்தையலங்கரித்தல். பூழிகளடக்கிச்செம்பொற்பூரணகும்பம்வைத்து வாழையுங்கமுகுநாட்டிமணியொளித்தீபமேற்றிச் |
|