சூழவன்பதாகைகட்டித்தோரணம்பலவுநாட்டி ஏழுயர்மாடமூதூரெங்கணுங்கோடித்தாரே. |
(இ -ள்.) (அந்நகரத்திலுள்ளார் யாவரும்),- பூழிகள் அடக்கி - (நிரம்பத் தண்ணீர்தெளித்து வீதிகளிற்) புழுதிகளை (மேற்கிளம்பாதபடி) அடக்கியும், செம் பொன் பூரண கும்பம் வைத்து - சிவந்த பொன்மயமான நீர்நிறை குடங்களை (வாயில் திண்ணைகளில்) வைத்தும், வாழைஉம் கமுகும் நாட்டி - வாழைமரங்களையும் பாக்கு மரங்களையும் (பந்தற்கால் முதலியவற்றிற்கட்டி) நிறுத்தியும், மணி ஒளி தீபம் ஏற்றி - இரத்தினமயமான ஒளியையுடைய விளக்குகளை ஏற்றிவைத்தும், சூழ வல் பதாகை கட்டி - சுற்றிலும் [நகரமெங்கும்] வலிய துவசங்களைக் கட்டியும், தோரணம் பல உம் நாட்டி - பலவகைத்தோரணங்களையும் தாபித்தும், ஏழ் உயர் மாடம் முதுஊர் எங்கண்உம் கோடித்தார் - உயர்ந்த ஏழுநிலைகளை [உபரிகைகளை] யுடைய மாளிகைகளைக்கொண்ட பழைமையான அந்நகர முழுவதும் அலங்கரித்தார்கள்; (எ - று.) அரசன்கட்டளைப்படி நகரத்தவரனைவரும் இங்ஙனம் நகரையலங் கரித்தனரென்க. தேர் முதலியன வரும்பொழுது புழுதிகிளம்பி மறைத்திடாமைப் பொருட்டு, தண்ணீர்தெளித்துப் புழுதிகளையடக்குவர்: பூரணகும்பமும், விளக்கும் கொடியும் - அஷ்ட மங்கலங்களிற் சேர்ந்தவை. பதாகை - பெருங் கொடி. ஏழ் - ஏழுநிலைகளுக்கு எண்ணலளவையாகுபெயர். (277) 119.-விராடனும் கங்கப்பட்டனும்சூதாடுகையில், தோல்வியுற்ற விராடன் ஒன்றுகூறல். மகன்வருமளவும்வெஞ்சூ தாடுதும்வருகவென்றாங்கு அகமிகமகிழ்ந்துவேந்த னந்தணன்றன்னோடாட மிகமுனியடுத்துவெல்லவென்றியுத்தரன்முன்மேவார் இகலழிந்தென்னவிப்போ ரழிதிநீயெந்தையென்றான். |
(இ - ள்.) ஆங்கு - அப்பொழுது, வேந்தன் - விராடராசன், அகம் மிக மகிழ்ந்து - மனம் மிகவுங் களித்து, (கங்கபட்டனைநோக்கி) 'மகன் வரும் அளவுஉம் - (எனது) புதல்வன் [உத்தரகுமாரன்] வரும்வரையிலும், வெம் சூது ஆடுதும் - (மேன்மேல்) விருப்பத்தைத்தருகின்ற சூதாட்டத்தை (நாமிருவரும்) ஆடுவோம், வருக - வருவாயாக,' என்று - என்று சொல்லி (வலிய அழைத்து), அந்தணன் தன்னோடு ஆட-சந்நியாசியாகிய அக்கங்கபட்டனுடனே சூதாடாநிற்க,- (அச்சூதாட்டத்தில்), முனி-கங்கபட்டன், அடுத்து - அடுத்தடுத்து, மிக வெல்ல - மிகுதியாக [பல ஆட்டம்] ஜயிக்க,- (அப்பொழுது விராடன் ஓராட்டந்தொடங்கிக் கங்கபட்டனை நோக்கி), 'எந்தை-எமது ஐயனே! வென்றி உத்தரன் முன் - ஜயசாலியாகிய உத்தரனுக்கு எதிரில், மேவார் இகல் அழிந்து என்ன - பகைவர்களான துரியோதனாதியர் வலிமை கெட்டமைபோல, இ போர் - இனி ஆடும் இந்த |