பழுது ஆகும்-தவறாம், என - என்று, முன்னவன் - மூத்தவனாகிய தருமன், மொழிந்தான் - சொன்னான்; (எ - று.) சினமிகுதலின் முனிதல் எனக் கூட்டி யுரைப்பினுமாம். அனலின் முதிர்கானகம் என்றும் பாடம். (307) 8.-பாண்டவரின்வெளிப்பாட்டை யறிந்த விராடன் தன்மைந்தனோடும்திறைப்பொருளோடும் பாண்டவர்பாதங்களில் வீழ்தல். குந்திவயின்வந்துதமகுருகுலம்விளக்கும் ஐந்தரசுமன்றுதனகன்கடையிருக்கச் சிந்தனையொடுந்திறைகொள்செல்வநிதியோடும் மைந்தனொடுமெய்தியவர்மலரடியின்வீழ்ந்தான். |
(இ -ள்.) குந்தி வயின் வந்து - குந்திதேவியினுடைய வயிற்றிலே பிறந்து,தம குருகுலம் விளக்கும் - தங்களுடைய குருகுலத்தை விளக்குபவரான, ஐந்துஅரசுஉம் - பாண்டவராசர்கள் ஐந்துபேரும், அன்று - அப்போது, தன் அகன்கடைஇருக்க - தன்னுடைய பரந்த இடத்திலே யிராநிற்க,- சிந்தனையொடுஉம் -கவலையுடனே, திறை கொள் செல்வம் நிதியோடுஉம் - (தான்) திறையிற்பெற்றபொருட்செல்வத்தோடும், மைந்தனொடுஉம் - (தன்) புத்திரனானஉத்தரனென்பவனோடும், எய்தி-(பாண்டவரிருக்குமிடத்திற்குப்) போய், அவர்மலர் அடியின் வீழ்ந்தான் - அந்தப் பாண்டவரின் தாமரைபோன்றபாதங்களில் வீழ்ந்து கும்பிட்டான்;
சிந்தனை - இந்தப்பாண்டவர் வேற்றுருவோடு நம்மிடத்து வசிக்கையில் அவர்களைப் பணியாளராகக்கொண்டு நடத்தினோமே என்பது கருதியதனாலாகியது: மேல் 13-ஆங் கவியில் "மனனிடரகற்றி" என வருதல் நோக்குக. சிந்தனையென்றசொல் கவலையென்னும் பொருளில் வருதலை "சிந்தனை முகத்திற்றேக்கி" என்ற இடத்துங் காண்க. (308) 9.-தருமன் விராடனைத்தழுவிப் புகழ்தல். விராடனைநறுங்குவளைமாலைவியன்மார்பில் தராபதியெழுந்தெதிர்தழீஇயினனிருத்திப் பராவருபெரும்புகழ்படைத்தவருனைப்போல் அராவின்முடிமேலுலகிலார்கொலுளரென்றான். |
(இ -ள்.) தராபதி - பூமிக்கெல்லாந்தலைவனாகிய தருமன்,-எதிர்எழுந்து - எதிராக (த்தன்னிருக்கையினின்றும்) எழுந்திருந்து, விராடனை-, நறுங் குவளை மாலை வியன் மார்பில் - நறிய குவளைமலர் கொண்டுதொடுத்த மாலையைணிந்த (தன்) பரந்த மார்பிலே, தழீஇயினன் - தழுவினவனாய், இருத்தி - உட்காரவைத்து, (அவனைநோக்கி),-'உனை போல் - உன்னைப்போல், பராவருபெரும் புகழ் படைத்தவர் - கொண்டாடத்தக்க மிக்க கீர்த்தியை யடைந் |