பக்கம் எண் :

வெளிப்பாட்டுச் சருக்கம் 219

வுடனே அவன்மயிலாகித்தந்தையாகிய விராடனிடம் வந்துசேர,
அதனையறியாத அவன் கோபித்துத் துரத்திவிட, மைந்தன் பறந்து சென்று
தவஞ்செய்து சிவபிரானருளாற் சாபவிடைபெற்று வில் முதலிய ஆயுதங்களும்
கவசங்களும் பெற்றன னென்பர்.  இவன் தன் பகைசெற்ற விவரம்
தெரியவில்லை; ஒருசாரார் ஸ்ரீகிருஷ்ணன் இந்தச்சிவேதனைக்கொண்டு
தன்பகையை யொழித்துக்கொண்டானென்று பொருள் கூறுவர்; அதற்குஉரிய
சரித்திரமும் தெரியவில்லை.  அன்புறாமல் என்று பிரதிபேதம்.        (319)

20.-தன் தந்தையின்தாளிற்சிவேதன் வீழ்ந்துபணிதல்.

தெம்மைந்தரென்னுங்களபங்களைச்சிங்கசாப
வெம்மைந்தின்வேறற்கமைந்தானொருவீரனான
கன்மைந்தனைக்கண்டுருகுந்திறற்றந்தைதாளில்
அம்மைந்தனும்வீழ்ந்துடன்வைகினனார்வமிக்கே.

      (இ -ள்.) தெம் மைந்தர் என்னும் களபங்களை - பகைவீரராகிய
யானைக்கன்றுகளை, சிங்கசாபம் வெம் மைந்தின் - சிங்கக்குட்டியின்
வலிமைபோன்ற வெவ்விய வலிமையினால், வேறற்கு -  வெல்லுதற்கு,
அமைந்தான் - பொருந்தினவனாகி, ஒரு வீரன் ஆன - ஒப்பற்ற வீரனான,
தன் மைந்தனை - தன் புத்திரனை, கண்டு -, உருகும் - உருகுகின்ற, திறல் -
வலிமையையுடைய, தந்தை - தமப்பனாகிய விராடனுடைய, தாளில் -
பாதங்களில், அ மைந்தன்உம் - அந்தப்புத்திரனாகிய சிவேதனும், வீழ்ந்து -
பணிந்து, ஆர்வம் மிக்கு - அன்புமிகுந்து, உடன் வைகினன் -
தந்தையுடனேசேர்ந்து தங்கினான்; (எ - று.)

      மைந்து- வீரம், இளமை:  அதனையுடையவன் - மைந்தன்:  எனவே,
வீரன், புதல்வன்என்ற பொருளைக் காட்டும்.  களபம் - யானைக்கன்று:
ஸிம்ஹஸாவெ:-சிங்கக்குட்டி: வடசொற்கள்.  "வெம்மைந்தின்
வேறற்கமைந்தோரொருவீரரான, தம்மைந்தரைக்கண்டுருகுந் தந்தையர் கடாளி,
லம்மைந்தரும் வீழ்ந்துடன் வைகினரார்வமிக்கே" என்று ஒருபாடம்
பதினேழாஞ்செய்யுளின் பாடபேதத்திற்கு ஏற்பக் காண்கின்றது.        (320)

21.-பாஞ்சாலர்முதலியோர்அங்குச் சேனையோடும் வருதல்.

பாஞ்சாலர்போசகுலமன்னவர்பாண்டிவேந்தர்
வாஞ்சாமனத்தின்வயமத்திரர்மாகதேயர்
பூஞ்சாபவெற்றிக்கொடிக்கேரளர்பொன்னிநாடர்
தாஞ்சால்புடனப்பதிவந்தனர்தானையோடும்.

      (இ -ள்.) பாஞ்சாலர் - பாஞ்சாலர்களும், போசகுலமன்னவர் -
போசகுலராஜாக்களும், பாண்டிவேந்தர் - பாண்டியமன்னவரும், வாஞ்சா
மனத்தின் வயமத்திரர் - விருப்பங்கொண்ட மனத்தினையுடைய வலிய
மத்திரதேசத்தாரும்,மாகதேயர் - மகததேசத்தவரும், பூஞ் சாபம் வெற்றி கொடி
கேரளர் - அழகியவில்லை(த் தமது) வெற்றிக்கு அடையாளமாகக்
கொடியிலேகொண்டசேரதேசத்து மன்னவரும், பொன்னிநாடர் - சோழநாட்டு
மன்னவரும், தாம் -(ஆகிய)