பக்கம் எண் :

22பாரதம்விராட பருவம்

 இதுமுதற் பத்துக்கவிகள் - பெரும்பாலும் முதல்மூன்றுசீர்கள்
விளங்காய்ச்சீர்களும் ஈற்றுச்சீரொன்று மாச்சீருமாகிவந்த அளவடினான்கு
கொண்ட கலிவிருத்தங்கள்.                                  (29)

30.-வண்ணமகள் வந்திருத்தலைவாயில்காவலர் தெரிவிக்க,
விராடன்மனைவி உள்ளேயழைக்குமாறு கூறுதல்
.

மதுமலரின்வாழ்திருவும்வந்துதொழவுரியாள்
நொதுமலினளாகியொருநுண்ணிடைநடந்தாள்
பதுமவிழியாயெனலும்வாயிலவர்பால்போல்
மதுரமொழியாளழைமின்வாணுதலையென்றாள்
.

      (இ -ள்.) வாயிலவர் - வாயிலிலேயிருந்து பாதுகாவல் புரிபவர், சுதேஷ்
ணையைக்கிட்டி அவளைநோக்கி),-'பதுமம் விழியாய்-தாமரை மலர்போன்ற
கண்களையுடையவளே! மது மலரின் வாழ் திருஉம் வந்து தொழ உரியாள்-
தேனைக்கொண்ட தாமரைமலரில் வாழ்பவளாகிய இலக்குமியும்
வந்துதொழுதற்குஉரிய கட்டழகுடையவளான, ஒரு நுண் இடை-நுண்ணிய
இடையையுடையாளொருத்தி, நொதுமலினள் ஆகி-சாதாரண
மானுடப்பெண்போன்று, நடந்தாள் - வந்துள்ளாள், எனலும்-என்று
தெரிவித்தவுடனே,-பால்போல் மதுரம் மொழியாள் - பால்போல்இனிய
பேச்சையுடையவளான அந்த விராடன் மனைவி, (அங்ஙனம் சொன்ன
வாயில்காவலரை நோக்கி),-வாள்நுதலை-ஒளியுள்ள நெற்றியையுடையவளான
அந்தப்பெண்ணை, அழைமின்-(உள்ளே) அழைத்துவாருங்கள்,' என்றாள் -
என்று கூறினாள்; (எ - று.)

     வந்தவளின் கட்டழகைக் காணும்போது பெருஞ்சிறப்பினளாயிருக்க
வேண்டுமென்று தோன்றுகின்றதாயினும், சாதாரணமான வறுமையுள்ள
பணிப்பெண்கோலத்தைப் பூண்டுள்ளா ளென்பார், மதுமலரின்வாழ்திருவும்
வந்து தொழவுரியாள் நொதுமலினளாகிநடந்தாள்' என்றார்.  நுண்ணிடை -
பண்புத்தொகையன்மொழி.  வாணுதல்-அடையடுத்த சினையாகுபெயர். (30)

31.-அரசன்மனைவி,வந்தவளையுபசரித்துப் பின்வினாவுதல்.

வந்தவளிருந்தவண்மருங்கணையும்வேலை
யந்தணுபசாரமுடனருகுறவிருத்திச்
சந்தொடகில்பூவிலைகடகவுடன்வழங்கி
யெந்தநகரீருரைமின்யாமுணரவென்றாள
.

      (இ -ள்.)வந்தவள்-(வண்ணமகளின் வடிவுகொண்டு) வந்தவளான அவள்,
இருந்தவள் மருங்கு-அரண்மனையிலேயிருந்த அரசமனைவியின் பக்கத்தில்,
அணையும் வேலை-வந்துசேர்ந்தபோது, (அரசன்தேவி),-அந் தண்
உபசாரமுடன்-அழகிய குளிர்ந்த உபசாரத்துடனே, அருகுஉற இருத்தி-(தன்)
சமீபத்திலே தங்கியிருக்குமாறு இருப்பிடந்தந்து,-சந்தொடு - சந்தனமும், அகில்
- அகில்தூபமும், பூ-புஷ்பமும், இலைகள் - வெற்றிலைகளும், தகவுடன் -
சிறப்பாக,