பக்கம் எண் :

224பாரதம்விராட பருவம்

வன்னிப்பொதும்பர்வயின்வைத்தவயங்குசோதி
மின்னிற்றிகழ்வெம்படையாவையுமீண்டுகொண்டார்.

      (இ -ள்.) முன்னி - ஆலோசித்து, சமருக்கு ஒருப்பட்ட - (எந்த வகை
யிலும் சந்திக்கு இணங்காவிட்டால்) போர்செய்யுமாறு சம்மதித்த, முடி - கிரீடங்
களையணிந்த, மகீபர் - அரசர் [பாண்டவர்],- கன்னிக்கு - காளிகாதேவிக்கு,
வேண்டும் - இன்றியமையாத, கடன் ஆன - முறைமையான, பலிகள் -
உயிர்ப்பலிகளை, நல்கி - கொடுத்து,- வன்னி பொதும்பர்வயின் -
வன்னிமரத்தின் பொந்திலே, வைத்த - (அஜ்ஞாதவாசஞ்செய்வதற்கு முன்னே)
வைக்கப்பட்ட, வயங்கு சோதி மின்னின - விளங்குகின்ற ஒளியையுடைய
மின்னலைப்போல, திகழ் - விளங்குகின்ற, வெம் படை யாவைஉம் -
(தம்முடையவான) கொடிய ஆயுதங்களையெல்லாம், மீண்டு - மறுபடியும்,
கொண்டார் - எடுத்துக்கொண்டார்கள்; (எ - று.)

     நாடுகரந்துறைசருக்கத்து 9, 10 - பாடல்களால், காளிகோயிலை யடுத்த
வன்னிமரத்தின்பொதும்பரில் பாண்டவர் தம்படைக்கலங்களைச் சேமித்து
வைத்தமை விளங்கும்.                                        (329)

30.-அபிமந்யுவின் விவாகம்முடிந்தபின் க்ருஷ்ணனும்
பாண்டவரும் மற்றையாவரும் உபலாவியத்திற்புகுந்து
போர்க்குவேண்டுவன ஆராய்தல்.

சேயோன்விழவுவிழைவோடுசிறந்தபின்னர்
மாயோனுமற்றக்குருமைந்தருமன்னர்யாரும்
போயோதைவீதியுபலாவிபுகுந்துதங்கள்
ஆயோதனத்துக்குறுநீர்மைகளாயலுற்றார்.

      (இ -ள்.) சேயோன்-(அபிமந்யுஎன்ற) குமாரனுடைய, விழவு-கலியாணம்,
விழைவோடு - (யாவரும்) விரும்பும்வண்ணம், சிறந்த பின்னர் - சிறக்க நடந்த
பிறகு,- மாயோன்உம் - ஸ்ரீக்ருஷ்ணனும், அ குரு மைந்தர்உம் - அந்தக்
குருகுல குமாரரான பாண்டவர்களும், மன்னர் யார்உம் - (பின்னும் தமராகவும்
நண்பராகவுமுள்ள) அரசர்யாவரும், போய் - (அவ்விராடநகரத்தை)
விட்டுச்சென்று, ஓதை வீதி - பலவகை யோசைகளையுடைய வீதியைக்
கொண்ட, உபலாவி புகுந்து - உபப்லாவியத்திற்புகுந்து, தங்கள்
ஆயோதனத்துக்கு - தாம்செய்யக் கருதய பெரும்போர்க்கு, உறும் -
வேண்டிய, நீர்மைகள் - தன்மைகளைக் குறித்து, ஆயல் உற்றார் -
ஆராய்தற்குப் பொருந்தினார்கள்; (எ - று.)

     சேயோன் - முருகக்கடவுள்: இச்சொல் - குமரன்என்பதுபோல,
மைந்தனென்ற பொருளைக் காட்டிற்று.  உபலாவி - உபப்லாவ்யம்
என்றவடசொல்லின்திரிபு:  இது, விராடநகரத்துக்கு மிக அருகிலுள்ளதாகும்.
மற்று - அசை.  மாயாக்குருமைந்தரும்என்றும், போயோகையோடும் என்றும்
பிரதிபேதம்.                                           (330)

வெளிப்பாட்டுச் சருக்கம்முற்றிற்று.

------

விராடபருவம் முற்றுப்பெற்றது.