பார்வையையுடைய திரௌபதியும், மதி மரபோர் ஐயவர்உம் - சந்திர குலத்தவரான பாண்டவரைவரும், மறைந்தனர்கள் ஆய்-, உறையும் - வசித்துவந்த, நாளில் - அக்காலத்திலே,-மெய் வரு - உண்மையே வருகின்ற, வழா - (ஒருபோதும்) தவறாத, மொழி - பேச்சையுடைய, விராடபதி திருநாடு- விராடராசனுடைய சிறந்த மச்சநாடானது, உய்வு அரு - நீங்குதலில்லாத, பெருந் திருவொடு - மிக்கசெல்வத்தோடு, ஓங்கியது - மேன்மையுற்றிருந்தது; (எ - று.) உத்தமோத்தமரான பாண்டவர் வசித்தலால், அந்நாடு எந்நாட்டினும் மேம்பட்டிருந்த தென்பதாம். மறைந்தனர்களாயுறைதல் - அஜ்ஞாதவாசஞ் செய்தல். அன்றே - ஈற்றசை. ஓங்கியதை என்பதில், ஐ - சாரியை. (37) 38.-இதுவும் அது. குருக்களவனூரினிடைகுருநிலனொடொப்புற்று இருக்கும்வழிமாமழையுமெவ்விளைவும்விஞ்சித் தருக்கினுடன்யானைமுதறானைகளும்விஞ்சிச் செருக்குமுடன்விஞ்சியதுசெப்பவரிதம்மா. |
(இ -ள்.) குருக்கள் - குருவமிசத்தவரான பாண்டவர்கள், அவன் ஊரி னிடை -அந்தவிராடனுடைய நகரத்திலே, குருநிலனொடு ஒப்பு உற்று - குரு நிலத்தில் வசிப்பதுபோன்று [தமக்குஉரியஊரில் வாழ்வதுபோன்று], இருக்கும் வழி-(இனிது) வசிக்கும்போது,-மாமழைஉம்-மிக்க மழையும், எ விளைவுஉம் - எப்படிப்பட்ட [பலவகையான] விளைவும், விஞ்சி - மிகுந்து,-யானை முதல் தானைகள்உம் தருக்கினுடன் விஞ்சி - [நாட்டின்செழிப்பினால் நன்கு போற்றப்படுவதனால்) யானைமுதலிய சேனைகளும் தருக்கு மிக்கு, (ஊர்முழுவதும்), செருக்குஉம் - வளமும், உடன் விஞ்சியது - ஒருசேர [எங்கும்] மிக்கிருந்தது: (அதனால் அந்தஊரின் தன்மை), செப்ப அரிது - (இன்னபடியிருந்ததென்று) சொல்லுதற்கு முடியாது; (எ - று.) அம்மா- வியப்பிடைச்சொல்: பாண்டவர்கள் அஜ்ஞாதவாசஞ் செய்வதனால், அவ்வூர் வாய்கொண்டு சொல்ல முடியாதபடி அவ்வளவு செழிப்பு விஞ்சியது குறித்து வியந்தவாறு. (38) நாடுகரந்துறைசருக்கம் முற்றிற்று. ------ |