மல்லினுக்குஇந்துஎன்ன என்பதற்கு - இரவில் வானத்துத் தோன்றும் பல சோதிகளுள் சந்திரன்போல என்று உரைத்து, அத்தொடரையும் போர்மல்லினுக்கு ஒருவன்யானே என்பதனோடு எட்டுவாரு முளர். இச்சருக்கத்திலுள்ள பதினான்குகவிகளும் - பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றவைமாச்சீர்களுமாகி வந்த அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தங்கள். (39) 2.-அந்த மல்லனது வருணனை. அண்டமாமுகடோடொத்தசென்னியனவனிமுற்றும் கொண்டமாமேருவொத்தகுங்குமக்கடகத்தோளான் சண்டமாருதத்தோடொத்தவலியினன்றந்தியெட்டின் கண்டமார்முகத்தினீண்டகையெனத்திரண்டகாலான். |
(இ-ள்.) (அந்தமல்லன்),-அண்டம் மா முகடோடு ஒத்த-அண்டத்தின் பெரிய மேலிடத்தையொத்த [ஓங்கிய], சென்னியன் - தலையையுடையவன்: அவனி முற்றுஉம்-பூமிமுழுவதையும், கொண்ட - தாங்கிக்கொண்டுள்ள, மா மேருஒத்த-சிறந்த மேருமலைபோன்ற, குங்குமம் கடகம் தோளான் - குங்குமச்சேறுபூசிய கடகமென்ற தோள்களையையணிந்த தோளையுடையவன்: சண்டமாருதத்தோடு ஒத்த - கொடுங்காற்றோடு ஒப்பிடத்தக்க, வலியினன்- பலத்தையுடையவன்: தந்தி எட்டின் - அஷ்டதிக்கஜங்களின், கண்டம் ஆர் முகத்தின் - கழுத்தையொட்டியுள்ள முகத்தினின்று, நீண்ட - நீண்டுள்ள, கையினை-துதிக்கைபோல, திரண்ட - திரண்டுள்ள, காலான் - கால்களையுடையவன்; (எ - று.) மேருமலை பூமியினிடையேயிருந்து அதனைத் தாங்குவ தென்ற நூற்கொள்கைபற்றி, 'அவனிமுற்றுங் கொண்ட மாமேரு' எனப்பட்டது. தந்தி- தந்தத்தையுடையது என யானைக்குக் காரணவிடுகுறி. தந்தி எட்டு-கிழக்கு முதலிய திக்குக்களிலிருக்கும் ஐராவதம் புண்டரீகம் வாமனம் குமுதம் அஞ்ஜநம் புஷ்பதந்தம் ஸார்வபௌமம் ஸு ப்ரதீகம் என்ற தெய்வயானைகள். தந்திக்கையை யுவமமாகக் கூறியதனால், இங்கு 'கால் என்றது - அரைக்குக் கீழ்பட்டுத் துடைமுதற் கொண்டுள்ள பகுதியைக் காட்டும். (40) 3.-அந்தமல்லன் பலமல்லர்தன்னைச் சூழ்ந்துவர, விராடனவைக்களத்தை யடைதல். ஆயிரமல்லர்தன்னையணிநிழலென்னச்சூழப் பாயிரும்புரவித்திண்டேர்மிசைவரும்பரிதிபோல மாயிருஞாலந்தன்னின்மற்றிவற்கெதிரின்றென்னச் சேயிருந்தடக்கைவேந்தன்றிருந்தவையதனைச்சேர்ந்தான். |
(இ -ள்.) ஆயிரம் மல்லர்-பலமல்லர்கள், தன்னை-, அணி நிழல் என்னஅழகிய நிழலைப்போல, சூழ-சூழ்ந்துவர,-பாய் இரு புரவி |