லேன் என்றுகர்ச்சித்தான். அப்போது மற்றைமல்லர்களெல்லாம் அஞ்சி நடுங்கி நிற்பதுகண்டு விராடராசன் 'இந்தமல்லனோடு பொரவல்லார் யர்ா?' என்றுவினாவ, அச்சத்தினால் எல்லா மல்லரும் வாய்திறவாது இருந்தனர். விராடராசன் வெகுண்டு 'நான் இந்த மல்லர்களுக்கு விட்டிருக்கும் கிராமங்களையும் சம்பளங்களையும் பறித்துக்கொண்டு விடுகிறேன்' என்றான்: அப்போது அருகேயிருந்த அங்கனென்ற யுதிஷ்டிரன் 'யுதிஷ்டிரனிடத்துக் கண்ட ஒருமல்லனுண்டு: அவன் நமது அரண்மனையில் மடைப் பள்ளிவேலையிலிருக்கிறான்: அவன் இவனோடு பொரவல்லான்' என்றான்: என்னவும், விராடன் 'இந்தமல்லனோடு பொர அவனை விரைவாக அழைமின்' என்றான் என்று முதனூலி லுள்ளது. (46) 9.-பலாயனனென்று மறுபேருள்ளவீமன் மற்போர்க்குச் சித்தனாகஅங்கு வருதல். பைம்பொன்மாமேருவெற்பின்பராரையைச்சோதிநேமி விம்பமாய்வளைந்ததென்னவிளங்குபொற்கச்சைச்சேர்த்தித் தம்பமாமென்னத்தக்கதண்டொடுதரணிவீழா உம்பராரமுதமுண்டவுரவினான்விரைவின்வந்தான், |
(இ -ள்.) தரணி வீழா உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான்- பூமியிற்கிடைக்காத தேவர்களின் அரியஅமிருதத்தை யுண்ட வலிமைபடைத்தவனானவீமன்,-பைம் பொன் மா மேரு வெற்பின் ஒரு அரையை - பசும்பொன்மயமானபெரிய மேருமலையின் பருத்த அரையை, சோதி நேமி-ஒளி மயமான சக்கரம்,விம்பம்ஆய் வளைந்தது என்ன - வட்டமாக வளைந்துகொண்டுள்ளதுஎன்னுமாறு, விளங்கு-விளங்குகின்ற, பொன் கச்சை-பொற்கச்சையை, சேர்த்தி-இடையிற்) கட்டிக்கொண்டு,-தம்பம் ஆம் என்ன தக்க - தம்பமோ என்றுகருதும்படியுள்ள, தண்டொடு - தண்டாயுதத்துடனே, விரைவின் வந்தான்-; (எ - று.)
வீமனதுஇடையிற் பொற்கச்சை விளங்குவது, மேருவின்பராரையில் நேமி வட்டமாச் சூழ்ந்தது போலும்; தற்குறிப்பேற்றம். சோதி நேமி- சூரியனென்பாரு முளர். தரணி வீழா - கங்கைநீர்ப் பெருக்கில் வீழ்ந்து, (பாதாளஞ்சென்று), உம்பராரமுதம்உண்ட என்று கூறலுமாம்: இச்சரித்திரம் வாரணாவதச்சருக்கத்திற் கூறப்பட்டுள்ளது. கச்சை - அரையாடை யவிழ்ந்திடாதபடி கெட்டியாக இருப்பதற்கு இடையிற் கட்டுவது, பருமை + அரை = பராரை : பண்புப்பெயர் ஈறுபோய், வருமொழி முதல்நீண்டு நிலைமொழியீறுகெட்டது: "ஈறுபோதல்... இனையவும் பண்பிற்கியல்பே" [நன். பத. 9.] (47) 10.-இரண்டுகவிகள்-பலாயனனும்முன்னர்வெற்றி பெற்றிருந்த மல்லவீரனும் பொருதலைத் தெரிவிக்கும். கதையுடைக்காளைவந்துகடுந்திறன்மல்லன்றன்னோடு உதயமோடத்தமென்னுமோங்கலோரிரண்டுசேர்ந்து |
|