பக்கம் எண் :

40பாரதம்விராட பருவம்

7.மாரசாயகத்தாலுயிர்மாளினும் வசையிலாதமரபின்வந்தோர்
                                         பிறர்,
தாரமானவர்தம்முகம்பார்ப்பரோ தக்கவர்க்குத்தகவிவையே
                                      கொலாம்,
சோரனாதலிற்சொற்றாயினித்தவிர் சுரேசரைவர்
                          தங்காவலென்றோளிணை,
வீரபோவென்னருகுறிலாவிபோம் விழித்திமைக்
                          குமுனென்றுவிளம்பினாள்.

      (இ -ள்.) மார(ன்) சாயகத்தால் - மன்மதபாணத்தினால்,
உயிர்மாளின்உம்- உயிர் போவதாயிருந்தாலும் [இறப்புநேர்வதானாலும்], வசை
இலாத மரபின்வந்தோர் - குற்றமற்ற வமிசத்திற் பிறந்தவர், பிறர் தாரம்
ஆனவர் தம் முகம்பார்ப்பர்ஓ - அயலாருடைய மனைவியானவளின்
முகத்தைக் கண்ணெடுத்துப்பார்த்தலேனுஞ் செய்வரோ? தக்கவர்க்கு -
யோக்கியர்கட்கு, தகவு -நற்குணங்கள், இவை ஏ கொல்-இவ்வாறு
பிறர்மனையை விரும்புதல்முதலியனவோ தாம்? சோரன் ஆதலின் -
கள்ளத்தன முடையாயாதலால்,சொற்றாய் - (நீ இவ்வாறான வார்த்தைகளைச்)
சொன்னாய்: இனி-, தவிர் -(இவ்வாறானபேச்சை) ஒழிவாய்: என் தோள்
இணை - என்னுடைய இரண்டுதோள்களும், சுரேசர் ஐவர் தம்-சிறந்ததேவர்
ஐவர்களின், காவல் -பாதுகாவலிலுள்ளன; வீர - வீரனே! போ-அப்பாற்போ:
என் அருகு உறில் -என்னருகேவந்தாலோ, விழித்து இமைக்கும் முன் -
கண்ணை மூடித் திறக்குங்காலவளவைக்குள், ஆவி போம் - உன்னுயிர்
ஒழிந்திடும், என்று-,விளம்பினாள்-சொன்னாள்; (எ - று.) ஆம் - அசை.

     விழித்திமைக்குமுன் போ என்று இயைத்தலும் ஒன்று.  கந்தருவர்
காவல்புரி கற்புடையவள் என்று வந்ததற்கு ஏற்ப, சுரேசர் என்பதும் கந்தருவர்
என்ற பொருளைத் தருமென்க.                                 (59) 

8.-திரௌபதி கடிந்துகூறவும்கீசகன காலில் விழுந்து
வேண்ட, அவள்சுதேஷ்ணையிடஞ் சேர்தல்.

பேதையிப்படிக்கூறவுங்காதனோய்பெருகுசிந்தையன்பின்னையு
                                         முன்புறா,
ஆதரத்தெனதாருயிர்போகினுமமையுமென்றவளம்புயச்சீறடி,
மீதுநெற்றிபடத்தொழுதான்வடிவேற்கணாளும்வெகுண்டுவிரைவினில்,
தூதுளங்கனிவாய்முத்தவாணகைச்சுதேட்டிணைப்பெயராளுழைத்
                                        துன்னினாள்.

      (இ -ள்.) பேதை-மடவரலான திரௌபதி, இப்படி கூறஉம் - இவ்வாறு
(கீசகன்செயலைக் கண்டித்துச்) செல்லவும், காதல் நோய்பெருகு சிந்தையன்-
ஆசைநோய் விஞ்சிய மனத்தையுடையவனாய்,-(கீசகன்),-பின்னைஉம் -
பின்னும், முன்பு உறா - (அவளுடைய) முன்னே வந்து, 'ஆதரத்து எனது
ஆர்உயிர்போகின்உம் அமையும்-காதல் காரணமாக எனது அருமையான உயிர்
இறப்பதானாலும் தகும்,' என்று - என்று சொல்லி, அவள் அம்புயம் சிறு
அடிமீது - அந்தத்திரௌபதியின் தாமரைமலர்போன்ற சிறிய பாதங்களின்மேல்,