பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 43

வேசம் மிகுந்த, மனத்தொடு - மனத்துடனே, தம்பியை - கீசகனை, மிக
முனிந்து - மிகவும் கோபித்து, தன் வீடு அணுகா வகை - (இனித்) தன்
வீட்டைச்சேராதபடி, 'ஏகுக - போய்விடுவாயாக,' என்றனள் - என்று கூறினாள்:
என்றலும் - என்று சொன்னவுடனே, அறம் பாவம் என்று எண்ணலான் -
(இந்தச்செயல்) புண்ணியம் (விளைப்பது, இது) பாவம் (தருவது) என்று
ஆலோசித்த லில்லாதவனாகிய அந்தக்கீசகன், சோகமோடு - துயரத்தோடு,
ஏகினான் - (தன்வீட்டுக்குச்) சென்றான்; (எ - று.)

     இடியேற்றைக்கேட்ட நாகம் நடுங்குமென்பது, நூற்கொள்கை:
'விரிநிறநாகம் விடருளதேனு, முருமின் கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்"
என்றது, நாலடி.  கேகயம் - மயில்.  அப்பூங்கொடி என்பது சுதேஷ்ணையைச்
சுட்டுவதாயின், நயனம் - (திரௌபதியின்) நயனம் என்க.         (63)

12.-அற்றைநாளிராத்திரிகீசகன் பட்ட மன்மதாவத்தை.
  
சென்றுதன்மனைபுக்கபின்மன்மதன்செருவினொந்தழிசிந்தையனாய்
                                              மலர்;
மன்றன்மெல்லணைவீழும்வெம்பாலையால்வகுத்ததோவிம்
                                    மலரணைதானெனும்,
தென்றறன்னையுந்தீயெனுந்திங்களைத் தினகரன்கொலென்றேங்குஞ்
                                         செயலழிந்து, 
அன்றவன்கருங்கங்குலிற்பட்டபாடவனையல்லதையார்படுவார்களே.

      (இ -ள்.) சென்று-போய், தன் மனை புக்க பின் - தன் வீட்டினுள்ளே
சேர்ந்தபிறகு, மன்மதன் செருவில் - மன்மதன் செய்யும் போரிலே, நொந்து -
வருந்தி, அழி - அழிந்த, சிந்தையன் ஆய் - மனத்தையுடையவனாய்,-மலர்
மன்றல் மெல் அணை வீழும் - மலர்கொண்டு பரப்பிய நறுமணமுள்ள
மெல்லிய படுக்கையிலே விழுவான்: 'இ மலர் அணை தான் - இந்தப்
பூப்படுக்கை, வெம்பாலையால் வகுத்ததுஓ - வெப்பமுள்ள பாலைநிலத்தா
லியன்றதோ?' எனும் - என்பான்:  தென்றல் தன்னைஉம் - தென்றற்
காற்றையும், தீ எனும் - தீயென்று சொல்வான்:  திங்களை - சந்திரனைப்
பார்த்து, (இவன்), தினகரன் கொல் - சூரியனேயோ!' என்று - என்றுகருதி,
ஏங்கும்-ஏக்கமடைவான்:  செயல் அழிந்து - செய்யவேண்டிய தொழில்
இன்னதென்றுணராது மனகிழ்ந்து, அன்று-அன்றைத்தினம், அவன்-, கருங்
கங்குலில்-கரிய இராப்போதிலே, பட்ட - அடைந்த, பாடு - வருத்தத்தை,
அவனை அல்லது - அவனை யல்லாமல், யார்-(வேறு)யாவர், படுவார்கள்ஏ-
அனுபவிப்பார்களோ? (எ - று.)

     பாலை-மிகவும் வெம்மையையுடைய நிலமாதலால், தனக்கு
மிக்கவெப்பஞ்செய்யும் மலரணையை, 'வெம்பாலையால் வகுத்ததோ
இம்மலரணைதான்' என்னலானான்.  காமமயக்கம் கொள்பவர்க்கு,
குளிர்ந்திருப்பனவான மலரணை திங்கள் தென்றல் முதலியன வெப்பத்தைச்
செய்தல், இயற்கை.  அல்லதை ஐ - சாரியை.  'அன்றகன் கருங்கங்குலில்'
என்றும் பாடம்.                                          (64)