பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 49

   (இ - ள்.) மாது அவள் - பெண்ணான அந்தத்திரௌபதி, கீசகன்
மனையில் ஏக(உம்)-கீசகனுடைய மனையிலே செல்லவும், (அவ்வேளையில்),
அல்போது அகலஉம் - இராப்போது கழியவும், அவன் - அந்தக்கீசகனுடைய,
புலம்பல் - தனிமையினாலாகிய துன்பம், போகவும்-,-பாதம் இல் -
காலில்லாதவனான [முடவனான], வல் திறல் - மிக்க சாமர்த்தியத்தையுடைய,
பாகன் - பாகனாகிய அருணனென்பவனால், ஊர்ந்த - செலுத்தப்பெற்ற, தேர் -
தேரின் மீது, ஆதபன் - சூரியன், உதயவெற்பு - உதய மலையிலே,
அணுகினான் - அடைந்தான்; (எ - று.)-அரோ - ஈற்றசை.

      தான்காலில்லாதிருக்கையில் ஒற்றைச்சக்கரத்தையுடைய சூரியனது
தேரைஒருநாளிற் பகலும் இரவும் உண்டாகும்படி வெகுவிரைவாகச்
செலுத்துதலால், 'வன்றிறற் பாகனூர்ந்த தேர்' எனப்பட்டது.

      இதுமுதல் இருபத்தாறுகவிகள் - பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று
மாச்சீரும், மற்றவை விளச்சீர்களுமாகிய அளவடிநான்கு கொண்ட
கலிவிருத்தங்கள்.                                             (72)

21.-திரௌபதியைக் கண்டதும்கீசகன் தகாதமொழி சொல்ல,
அவள் சூரியனை வணங்குதல்.

தருக்கியகாமுகன்றகாதுசொல்லவே
உருக்கிளர்சாயலோடுளமழிந்துபோய்
முருக்கிதழ்வல்லிதன்முளரிச்செங்கையால்
அருக்கனையிறைஞ்சினாளழிவில்கற்பினாள்.

      (இ -ள்.) தருக்கிய - வலிமைச்செருக்கைக்கொண்ட, காமுகன் -
காமுகனாகிய கீசகன், தகா (த) து - தகாதவார்த்தைகளை, சொல்லவே-,-அழிவு
இல் கற்பினாள் - அழிதலில்லாத கற்பையுடையவளாகிய, முருக்கு -
பலாசமலர்போன்ற, இதழ் - உதட்டையுடைய, வல்லி - கொடிபோன்றவளான
அந்தத் திரௌபதி,-உரு - (தனது) வடிவத்திலே, கிளர் - விளங்குகின்ற,
சாயலோடு - நிறத்துடனே, உளம் - மனமும், அழிந்து - அழிய, போய்-,-தன்
- தன்னுடைய, முளரி - தாமரைமலர்போன்ற, செங்கையால் - சிவந்த
கையினால், அருக்கனை - சூரியனை, இறைஞ்சினாள் - வணங்கினாள்; (எ -
று.)-சூரியனை வணங்கின படியை அடுத்த செய்யுள் தெரிவிக்கும்.

     உலகத்தில் நடப்பதற்கெல்லாம் சாட்சியாகிய தேவதையாதலால்,
சூரியனையிறைஞ்சிக் கூறினான்.                               (73)

22.-சூரியனைத் தன்னிடரைப்போக்குமாறு திரௌபதி
வேண்டுதல்.

துரங்கமோரேழுடன்சோதிகூர்மணிக்
கரங்களோராயிரங்கவினத்தோன்றினாய்