மிகுவித்தன என்று கூறவேண்டிய இடத்தில் 'காட்டும்' என்று பிரயோகித்திருத்தலால், இலக்கணையால், அச்சொற்குச் சொரியப் பெற்ற என்று பொருள் கூறலாயிற்று. (77) 26-கீசகன் தன்முன்னேநிற்கும் திரௌபதியைக் காணுதல். தாக்கியகாமநோய் தழைக்கவன்புற நோக்கியதிசையெலாங்காணுநோக்கினான் பாக்கியநெஞ்சுறப்பலித்ததென்னவே நீக்கியமடந்தைமுனிற்றல்கண்டுளான். |
(இ - ள்.) தாக்கிய - (தன்னை) வருத்திய, காமம் நோய் - மன்மதனால் நேர்ந்த வியாதியானது, தழைக்க - கிளையாநிற்க, அன்புஉற - காதல் பொருந்த, நோக்கிய-கண்ணுக்குஎட்டிய, திசை எலாம் - திக்குக்கள் முழுவதிலும், காணும் - பார்க்கின்ற, நோக்கினான் - கண்பார்வையை யுடையவனான கீசகன்,- 'பாக்கியம் - (தான் செய்துள்ள) புண்ணியப்பேறு, பலித்தது - பயனையுண்டாக்கிற்று', என்ன - என்று கருதுமாறு, நீக்கிய மடந்தை - (தன்னை) முன்பு விலக்கிய பெண்ணாகிய திரௌபதி, முன் நிற்றல் - முன்னே நிற்பதை, நெஞ்சுஉற - மனமார, கண்டுளான் - பார்த்தவனானான்; (எ - று.) காமநோய் மிகமிக, கண்ணுக்குத் தெரியுமிடங்களி லெல்லாம் கீசகன் மருளமருள விழித்துப் பார்த்தவனாய், திரௌபதிவந்து தன் முன் நிற்றலைக் கண்டானென்க. அவள் முன்னேநின்றது - தான்செய்த புண்ணியப்பயனே அவளைத் தன்முன்னே வந்துநிற்குமாறுசெய்தது என்று அந்தக்கீசகன் கருதுதற்கு இடங்கொடுத்தது என்ற கருத்துப்பட, 'பாக்கியம்பலித்த தென்ன நெஞ்சுற மடந்தை முன் நிற்றல் கண்டுளான்' என்றார். (78) 27.-இரண்டுகவிகள் -தன்ஆதரந்தோற்றத் திரௌபதியை வருகஎன்று கீசகன் அழைத்தலைத் தெரிவிக்கும். வந்தனளென்னுடை மாதவப்பயன் வந்தனளென்னுடைவழிபடுந்தெய்வம் வந்தனளென்னுடையாவிவாழ்வுற வந்தனளென்னுடைவண்ணமங்கையே. |
மூன்றுகவிகள் - ஒருதொடர். (இ -ள்.) என்னுடை மாதவம் பயன் - என்னுடைய பெருந்தவத்தின் பயன் போன்றவள், வந்தனள்-: என்னுடை வழிபடும் தெய்வம் - யான்வழிபடுகின்ற தெய்வம் போன்றவள், வந்தனள்-: என்னுடை ஆவி - என் னுடைய உயிர்போன்றவளான பெண், வந்தனள்-: என்னுடை வண்ணமங்கை - என்னுடைய வண்ண மங்கை, வாழ்வு உற-(யான்) வாழ்ச்சியடைய, வந்தனள்-; (எ - று.) வழிபடுகிறதெய்வம் தன்விருப்பத்தை யளிக்கவல்லதாதல் போல இந்த வண்ணமங்கை தன்விருப்பமாகிய கலவியின்பத்தை |