யளிப்பா ளென்னுங் கருத்தினால், அவளை 'வழிபடுந்தெய்வம்' என்கின்றான். "தனியும் ஒரோவழி" [நன். பொது. 41] என்றதனால் "மாதவப்பயன்" "வழிபடுந்தெய்வம்" என்பவை முதலிய பெயர்ச்சொற்கள் ஒரு பொருளையே குறிப்பன என்று தெரிய நிற்பதனால், பெயர்தோறும் ஒருவினையே கொடுக்கப்பட்டது. என்னுடை ஆவிவாழ்வு உற என்னுடை வண்ணமங்கைவந்தனள் என்றுகூட்டி யுரைப்பாருமுளர். (79) 28. | வருகநீயருகுற மதுரவாசகம் தருகநீயிருசெவிதழைக்கவுள்ளநின்று உருகநீதழுவுக வுடலந்தேமுறப் பருகநீவழங்குக பவளவாயெனா. |
(இ - ள்.) நீ-, அருகு உற -சமீபத்திற் பொருந்த, வருக -: நீ-, இருசெவி தழைக்க - (என்னுடைய) இரண்டுகாதுகளும் செழிக்குமாறும், நின்று உள்ளம் உருக-(உன் வாசகங்கள் என்மனத்திலே) நிற்பதனால் (அந்த) மனம் உருகுமாறும், மதுரம் வாசகம் - இனிய வார்த்தைகளை, தருக-: உடலம் தேம் உற - என்னுடம்பு இன்பமடையுமாறு, நீ-, தழுவுக-: நீ-, பருக- (நான்) நுகருமாறு,- பவளம் வாய் - பவழம் போன்ற (உன்) வாயிதழை, வழங்குக - தருவாயாக, எனா - என்று சொல்லி,-(எ - று.)- "கிடந்தவனெழுந்து" என்று மேற்கவியில் தொடரும். ஆதரத்தினால், 'நீ' என்பது வாக்கியந்தோறும் வந்தது. (80) 29.-தன்னைக் கீசகன் பற்றவருகையில் திரௌபதி யோட, கீசகனும் தொடர்ந்து செல்லுதல். கிடந்தவனெழுந்தொருகேடுவந்துறா மடந்தையைத்தழுவுவான்வந்துசார்தலும் விடந்திகழ்விழியினாளோடவேட்கையால் தொடர்ந்தனனறிவிலாச்சோரன்றானுமே. |
(இ -ள்.) கிடந்தவன் - (படுக்கையிற்) படுத்திருந்தவனான கீசகன், எழுந்து-, ஒரு கேடு வந்துறா மடந்தையை-ஒருதீங்கும் வரப்பெறாத பெண்ணாகிய திரௌபதியை, தழுவுவான் - ஆலிங்கனஞ்செய்து கொள்ளுதற்பொருட்டு, வந்து சார்தலும் - வந்துசேர்ந்த வளவில்,- விடம் திகழ் விழியினாள் - கொடுமைவிளங்குகின்ற கண்பார்வையையுடையவளான அந்தத்திரௌபதி, ஓட - ஓடாநிற்கையில்,-அறிவு இலா சோரன் தான்உம்- நல்லறிவு இல்லாத கள்ளநெஞ்சை யுடையனான அந்தக்கீசகனும், வேட்கையால் - காதலால், தொடர்ந்தனன் - (அவளைத்) தொடர்ந்து சென்றான்; (எ - று.) 'கேடுவந்துறா மடந்தை' என்றது, அவளுடைய பாதிவிரதியத்திற்கு ஒருவராலுந் தீங்கு இழைக்கமுடியாது என்ற குறிப்பினது. அவள் நோக்கே அந்தக் கீசகனுடைய மரணத்திற்குக் காரணமாவதால், 'விடந்திகழ் விழியினாள்' என்ற தென்னலாம்: அன்றியும், கருவிழிக்கு விடத்தை உவமை கூறுதலும் உண்டு. (81) |