தனித்துள்ள பெரிய மராமரமானது, தழல்கொளுந்திடாது - நெருப்புப்பற்றி யெரிவதற்கு ஏற்றதாகாது: (ஆகையால் இப்போது), உனக்கு அடும் இந்தனம் அன்று - உனது அடுதொழிற்கு ஏற்ற விறகு அன்று,' என்று-, ஓதினான் - (குறிப்பினாற்) சொல்லி (அந்த வீமன் செயலை)த் தடுத்திட்டான்; (எ - று.)
இந்தனத்துக்கு உதவுமாஎன்று பலாயனன்பார்ப்பதாக வைத்துக்கொண்டு, 'இது விறகுக்கு உதவா தாதலால், இதனைப் பிடுங்கவேண்டா' என்று தடுப்பவன்போல 'இந்தவேளையில் இதுகொண்டு எதிரியை ஒழிக்க முயல்வது தகாது' என்பதைக் குறிப்பித்தான் தருமபுத்திர னென்க. பலாயனனென்ற வீமனுடையசெயலை இங்குத் தருமபுத்திரன் வேறுகாரணங்கூறிமறைத்ததாக வந்தது அணியியலில் - வஞ்சநவிற்சியணியின்பாற்படும்: வடநூலார் வ்யாஜோக்தி யென்பர். முனித்தகை - முனிவர்க்குரிய நற்குணமுடையவனென அன்மொழித்தொகை. (87) 36.-அதுகேட்டு வீமன் வலிமையை யடக்கிக்கொண்டுநின்றானாக, திரௌபதி விராடன் முன்னிலையில் அழுதுகொண்டு கூறுதல் சீரியகங்கனன் றுரைத்தசெம்மொழி பாரியதாமெனப் பலாயனன்கொளா வீரியமகத்துளே நிறுத்தும்வேலையில் கூரியவிழியினா ளழுதுகூறுவாள். |
(இ - ள்.) சீரிய - சிறப்புற்ற,கங்கன் - கங்கனென்று மாறுபெயர் பூண்ட தருமபுத்திரன், அன்று - அப்போது, உரைத்த - சொன்ன, செம் மொழி - நேர்மையான வார்த்தையை, 'பாரியது ஆம்-(இச்சொல்) சிறப்புற்ற பேச்சாம்,' என - என்று, பலாயனன் - வீமசேனன், கொளா - (மனத்திற்) கொண்டு,- வீரியம் - (தன்) வலிமையை, (வெளிக்காட்டாது), அகத்துளே - (தன்) மனத்தினிடத்தில்தானே, நிறுத்தும் - அடக்கிய, வேலையில் - அப்போது,-கூரிய விழியினாள்-கூர்மையான கண்களை யுடையவளான திரௌபதி, அழுது கூறுவாள் - அழுதுகொண்டு கூறுபவளானாள்; (எ - று.) - திரௌபதி விராடன்முன்னிலையிலே புலம்பிக் கூறுவதை, மேல் மூன்று கவிகளிற் காண்க. பாரியது - பருமையென்ற பண்படியாப்பிறந்த குறிப்புமுற்று. (88) 37.-மூன்று கவிகள் - விராடனிடம் திரௌபதி முறையிடுவதைத் தெரிவிக்கும். தீண்டுதறகாதெனச் செம்மையொன்றிலான் வேண்டியசெய்வது வேத்துநீதியோ ஆண்டகையிதற்குநீ யல்லவாமெனா ஈண்டொருமொழிகொடா திருப்பதென்கொலோ. |
|