(தன்)கண்களிலிருந்து கோபாக்கினியின்பொறி பறக்கவும், (அவ்வாறே), இரு கை நெருப்பு எழ - (மோதிப் பகையழிக்கவல்ல) இரண்டுகைகளினின்றும் நெருப்புத்தோன்றவும், உள் நெருப்பு எழ - மனத்திலும் உக்கிரந் தோன்றவும், தனது உடல் நெருப்பு எழ - (உள்ளிருக்கும் சினத்தீ வெளியேமூள்வதனால்) தன் உடம்பினின்றும் நெருப்புத் தோன்றவும், மண் நெருப்பு எழ எழ - (அந்தச் சினத்தோடு உக்கிரங்கொண்டு நடத்தலால்) நடக்கும் பூமியினின்றுங்கூட நெருப்பு மிகுதியாகத் தோன்றவும், மடையில் - சமையல் செய்யுமிடத்தில், எய்தினான் - போய்ச்சேர்ந்தான்; (எ - று.) ஒருபொருளையுடைய 'நெருப்பெழ' என்ற தொடர் பன்முறை வந்தது - சொற்பொருட்பின்வருநிலையணி. கைந்நெருப்பெழ என்றது - அப்போது பகையைமோதி யொறுப்பதற்குக் கை ஒருபால் விரைவு கொண்டிருந்தமையைக் குறிப்பிக்கும். நெருப்பெழவருமடையில் என்றும் பாடம். (97) வேறு. 46.-சூரியாஸ்தமன வருணனை. பன்னிரு வரினு நாடொறுங் கனக பருப்பதம் வலம்வருந் தேரோன், மின்னிகர் மருங்குல் விரதசா ரிணிபால் விளைவுறு துயரம துணர்ந்து, தன்னொரு மரபிற் றோன்றலை வெறுத்துத் தனிப்பெருந்தேர்குட பொருப்பின், சென்னியி னுருள வுருட்டியத் திசையுஞ்சிவப்புறத் தானுமெய் சிவந்தான். |
(இ - ள்.) பன்னிருவரின்உம் - (ஆதித்தர்) பன்னிருவருள்ளே, நாள் தொறுஉம் - தினந்தோறும், கனகம் பருப்பதம் - பொன்மலையாகிய மேருமலையை, வலம் வரும் - பிரதட்சிணமாக வருகின்ற, தேரோன் - தேரையுடைய சூரியன்,- மின் நிகர் மருங்குல் விரதசாரிணிபால்- மின்னலையொத்து விளக்கத்துடன் துவண்டு தோன்றுகின்ற இடையையுடைய விரதசாரிணி யென்று மாறுபேர்பூண்ட திரௌபதியினிடத்தில், விளைவுறு - தோன்றிய, துயரம் அது - மனவருத்தத்தை, உணர்ந்து -,- தன் ஒரு மரபில் தோன்றலை - தனது ஒப்பற்ற வமிசத்திற்பிறந்த ஆண்களிற்சிறந்தோனாகிய விராடமன்னவனை, வெறுத்து-, தனி பெரு தேர் -(தனது) தனித்த பெரிய தேரை, குடபொருப்பின் சென்னியின் உருள உருட்டி - மேற்குமலையின் [அஸ்தமயபருவதத்தின்] சிகரத்திலே உருண்டு செல்லுமாறு செலுத்திவிட்டு, அ திசைஉம் சிவப்பு உற - அந்தமேற்குத்திக்குஞ் செந்நிறமடைய, தான்உம் மெய்சிவந்தான்-. ஆதித்தியர் [சூரியர்] பன்னிருவராவார் - தாதா சக்கரன் அர்யமன் மித்திரன் வருணன் அம்சுமான் ஹிரண்யன் பகவான் விவஸ்வான் பூஷா ஸவிதா துவட்டா என்பவர்; இன்னும் சிறிது வேறாகவும் கூறப்படுவர், இந்தப்பன்னிரு பெயரைக்கொண்ட சூரியன் ஒவ்வொருமாதத்தில் ஒவ்வொரு பெயர்பூண்டு மேருவை |