பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 77

இன்றைக்குஇவ்விடத்துக்கு வந்தது, உலப்புஉறும் - அழியும் நிலைமையை
யடைந்த, எனது ஆவி-என்னுயிரை, ஈயஓ-கொடுத்தற்குத்தானோ; (எ - று.)

      நிலாதீபம் என்றாற்போன்ற ஒளியைத் தருவது யாதொன்றும்
இல்லாமையால், செறிந்தஇருளில் கண்ணால் வழியைக் கவனிக்க முடியாமல்
காலாலேயே தடவித்தடவி அன்னாள் வந்தாளென்று குறிக்க 'கால்வழி காட்ட
வந்தது' என்கின்றான்.  கால்வழிகாண என்று பிரதிபேதம்.           (120)

69.கிஞ்சுகமலர்ந்துநின்கிள்ளைவாய்மையால்
அஞ்சலென்றோருரையளித்தல்காண்கிலேன்
நஞ்சனவிழிக்கடைநயந்தபார்வைகொண்டு
எஞ்சுமென்னுயிரினையெடுப்பதென்றுநீ.

      (இ -ள்.) கிஞ்சுகம் மலர்ந்து-பலாசமலர் போன்ற (உன்) வாயைத்திறந்து,
நின் கிள்ளை வாய்மையால் - உனது கிளிபோன்ற வாய்வார்த்தையால்,
அஞ்சல் என்று - (காமதேவனுக்குப்) பயப்படாதே என்று, ஓர் உரை-
ஒருபேச்சை, அளித்தல் - அன்போடுதர, காண்கிலேன் - பார்க்கின்றிலேன்
[கேட்கிலேன் என்றபடி]: நஞ்சுஅன - விஷத்தையொத்த, விழிக்கடை-
விழியின்கடையினால் [கடைக்கண்ணால்], நயந்த-விரும்பிக் காண்கின்ற,
பார்வைகொண்டு - பார்வையினால், எஞ்சும்-ஒடுங்குகின்ற, என் உயிரினை-,
நீ-, எடுப்பது - பாதுகாப்பது, என்று-எப்போது? (எ - று.)

     உயிரினையெடுப்பது - உயிரையடியோடு போக்குவதுஎன்ற ஒரு விபரீதப் பொருளுந் தோன்றும். விழிப்பது-விழி: காரணக்குறி.  கருநிறத்தாலும் உயிரைக்கவருந்தன்மையாலும் விழிக்குநஞ்சுஉவமை.                 (121)

70.வழிபடுதெய்வமுமற்றும்முற்றுநீ
இழிபடுபிறர்முகமென்றுநோக்கலென்
கழிபடருற்றதென் காமநோயெனா
மொழிபலகூறினான்முகம்புகுந்துளான்.

      (இ -ள்.) வழிபடு தெய்வம்உம் - (நாடோறும் நான்) கும்பிடும்
கடவுளும், மற்றும் முற்றுஉம் - மற்றுமுள்ள எல்லாமும், நீ - நீயே; (இனி),
இழிபடு - (உன்கட்டழகுக்கு முன்னே) இழிவாகத்தோன்றுகிற, பிறர் முகம்-
அயல் மாதராரின் முகத்தை, என்றுஉம் - எப்போதும், நோக்கலென் -
பார்க்கமாட்டேன்; என் காமம் நோய் - என்னுடைய காதல்நோயானது, கழி
படர் உற்றது - மிகப்பரவுதலைப் பொருந்தியிட்டது, எனா - என்று, முகம்
புகுந்து உளான் - அவ்விடத்துவந்து பொருந்தியவனான கீசகன், பல மொழி
கூறினான்-பல வார்த்தைகளைப் பேசினான்; (எ - று.)

     மாறுவேடம்பூண்டு வீமன் வந்து எதிரில் தூணத்தில்
ஒதுங்கிநின்கின்றானென்பதைக் கீசகன் அறியாமல் திரௌபதிதான்
வந்துள்ளாளென்று கருதியதனால், இவ்வாறெல்லாம் கூறலானானென்க.