கோமளவல்லிக்கொடிநிகர்காளிகோயிலின்முன்னரோர்வன்னி நாமளவிடுதற்கரியபல்கிளையானலம்பெறுபாதவநண்ணா. |
(இ -ள்.) யாமளம் மறையால் - யாமளமென்று சொல்லப்படுகிற வேத மந்திரப்பகுதியைக் கொண்டு, யாவர்உம் பணிவாள் - எல்லாராலும் வணங்கப்படுபவளும், எழு வகை தாயரில் ஒருத்தி - ஸப்தமாதாக்களில் ஒருத்தியும், சாமளம் வடிவோடு அ நகர் வாழ்வாள் - கருநிற வடிவத்தோடு அந்நகரில் வசிப்பவளும், சங்கு தண்டு அம்கையில் தரிப்பாள் - சங்கத்தையும் தண்டாயுதத்தையும் அழகிய கையில் தரிப்பவளுமான, கோமளம் வல்லி கொடி நிகர் காளி - அழகிய வல்லி யென்று பேர்பூண்ட கொடியை யொத்திருப்பவளான காளியென்பவளின், கோயிலின் - கோயிலுக்கு, முன்னர் - முன்புறத்திலே, நாம் அளவிடுதற்கு அரிய பல் கிளையால் - நம்மால் அளவிடமுடியாத [மிக்க] பலகிளையோடு (பொருந்தி), நலம் பெறு - அழகு பொருந்திய, ஓர் வன்னி பாதவம் - ஒரு வன்னிமரமானது, (இருப்பதை), நண்ணா-கிட்டி,-(எ - று.)- "ஒளித்து ஒரு விரகால் வைத்தனராகி" என அடுத்த கவியோடு தொடரும். யாமளம்என்பது - அதர்வணவேதத்தின் ஒருபகுதியென்றும், அது- காளிஸ்தோத்ரம் முதலியவற்றைக் கொண்ட தென்றுங் கூறுவர். எழுவகைத்தாயர் - ப்ராஹ்மீ மாஹேஸ்வரீ கௌமாரீ வைஷ்ணவீ மாஹேந்த்ரீ வாராகீ மஹாகாளீ எனப்படுவர். சாமளம் = ஸ்யாமளம்: வடசொல். வன்னி = வஹ்னி. பாதவம் = பாதபம்: அடியாற் பருகுவதெனக் காரணப்பொருள்படும் வடசொல். வாழ்வாள் பலபடைதனது கைத்தரிப்பாள் என்றும்பாடம். (9) 10. | தத்தமபடையுங்கவசமுமனைத்துந்தனித்தனியைவருந்தரித்த மெய்த்திறலுடையயாவுமத்தருவின்கோடரத்தொளித்தொருவிரகால் வைத்தனராகியாவருமுணராவகையருமறைகளும்பயிற்றி முத்தலைவடிவேற்காளியைவணங்கிமுன்னினார்புரிதொழின்முற்றும். |
(இ -ள்.) தனித்தனி - தனித்தனியே, ஐவர்உம் - பஞ்ச பாண்டவர்களும், தரித்த - பூண்டிருந்த, தம் தம படைஉம் - தங்கள் தங்களுடைய ஆயுதங்களையும், கவசம்உம் - கவசங்களையும், அனைத்துஉம் - ஆடை முதலியவற்றையும், மெய் திறல் உடைய யாஉம் - உண்மையான வலிமையையுடைய மற்றுமுள்ளவற்றையும், அ தருவின் கோடரத்து - அந்த வன்னிமரத்தின் பொந்திலே, ஒரு விரகால் - ஒப்பற்ற உபாயத்தினால், ஒளித்து வைத்தனர் ஆகி - ஒளித்து வைத்தவராய்,- யாவர்உம் உணராவகை - எவரும் அறியாதபடி, அருமறைகள் உம் பயிற்றி - அருமையான மந்திரங்களையுஞ் சொல்லி, வடி முத்தலைவேல் காளியை வணங்கி - கூரிய திரிசூலத்தையேந்திய காளிகாதேவியை வணங்கிவிட்டு, புரி தொழில் முற்றுஉம் முன்னினார் - (தாம்) செய்யவேண்டிய தொழில் முழுவதையும் ஆலோசித்தார்கள்; (எ - று.) |