காளைதன்னையும், உம்மை-உயர்வுசிறப்பு. இனி, காளை-வீமன், தன்னையும் சூறையிற் சூழ்வருமாறு சுற்றி மிடலில் விஞ்சினானாகிய கீசகன் பார்மிசை வீழ்வரப் புடைத்தனன் என்றலுமாம். (129) 78. | விழுந்தவன்மீளவும்வெய்துயிர்த்தனன் எழுந்துதன்பகைவனதிருண்டகுஞ்சியை அழுந்தவல்விரல்களாற்சுற்றியாய்மரக் கழுந்தெனப்புடைத்தனன்கைகள்சேப்பவே. |
(இ -ள்.) விழுந்தவன் - விழுந்த வீமன், வெய்து உயிர்த்தனன்- வெம்மையாகப் பெருமூச்சு விட்டவனாய், மீளவும் எழுந்து-, தன் பகைவனது - தன் பகைவனான கீசகனுடைய, இருண்ட குஞ்சியை-கருநிறமுள்ள தலைமயிரைஅழுந்த - உறுதியாக, வல் விரல்களால் சுற்றி-, ஆய்மரம் கழுந்து என - ஆராயப்பெற்ற மரத்தின் கழுந்தைப் புடைப்பதுபோல, கைகள்சேப்ப - அவன் தலைமயிரைப் பிடித்ததன்) கைகள் செந்நிறத்தையடையா நிற்க, புடைத்தனன்-; கழுந்து- மரக்கட்டை. (130) 79. | புடைத்தனனிவனவன்புடைத்தகைகளை விடைத்தனனகற்றிமெய்ம்மேவுபூதியும் துடைத்ததனனாகியத்தோன்றல்வாயினை உடைத்தனனொருகையாலொருகைபற்றியே, |
(இ -ள்.) புடைத்தனன் இவன் - புடைக்கப் பட்டவனாகிய இவன், புடைத்த அவன் கைகளை - புடைத்த அந்தவீமன் கைகளை, விடைத்தனன்- கோபித்தவனாய், அகற்றி-நீக்கி, மெய் மேவு பூதிஉம் துடைத்தனன் ஆகி - (பார்மிசைப் புடைத்ததனால் தனது) உடம்பிற்பட்ட புழுதியையும் துடைத்தவனாகி, ஒரு கை பற்றி-(ஒருகையால் அவனைப்) பிடித்துக்கொண்டு, ஒரு கையால் - மற்றொருகையினால், அ தோன்றல் வாயினை - அந்தவீரனது வாயை, உடைத்தனன்-. இது,கீசகன்செயலைக் கூறியது. விடைத்தனன் என்பதற்கு - விரைந்தவனாய் என்றும், விடுத்தவனாய்என்றும் தடுத்து என்றும் கூறுவாரு முளர். (131) 80.-இருவரும் ஒத்துப்பொரஇரவில் வெகுநேரங் கழிதல். வீரமும்வலிமையும்விரகுமொத்தவர் தீரமுந்தெளிவுநாஞ்செப்பற்பாலவோ நேரமுஞ்சென்றது நிசையெனாமிகு சூரமுஞ்செற்றமுமுடையதோன்றலே. |
(இ -ள்.) வீரம் உம் - வீரத்திலும், வலிமைஉம்-தேகவலிமையிலும், விரகு உம் - (போர்செய்யுந்) திறத்திலும், ஒத்தவர்-ஒத்தவர்களான அந்தக் கீசகவீமர்களின், தீரம்உம்-மனோதைரியமும், தெளிவு |