உம் -(போரிலுள்ள) உத்ஸாஹமும், நாம் செப்பற்பாலஓ - நம்மாற் சொல்லுந் தரத்தவோ? மிகுசூரம்உம் - மிக்க சூரத்தனமும், செற்றம் உம் - பகைமையும், உடைய-, தோன்றல் - வீரனான வீமன், 'நிசைநேரம்உம் சென்றது - இரவின்நேரமும் வெகுவாகக் கழிந்திட்டது,' எனா - என்று கருதி,- (எ - று.) - "மன்னவன் மைத்துனன் மார்பொடிந்திட, ஒன்றிட, தாக்கி, சுருக்கினான்" என மேலிற் கவியில் முடியும். தெளிவு- போரிலுள்ள தெளிவான ஞானமுமாம். நிசை = நிஸா: வடசொல். (132) 81.-இரண்டுகவிகள்-கீசகனுடலைத் தசையின்மலையெனத் தோன்றச்சுருக்கி வீமன்அவனாவியைப் போக்கினமை கூறும். மன்னவன்மைத்துனன்மார்பொடிந்திடச் சென்னியுந்தாள்களுஞ்சேரவொன்றிடத் தன்னிருசெங்கையாற்றாக்கிவான்றசை துன்னியமலையெனச்சுருக்கினானரோ. |
(இ -ள்.) மன்னவன் மைத்துனன் - விராடமன்னவனுடைய மைத்துனனாகிய கீசகனுடைய, மார்பு-, ஒடிந்திட-ஒடியவும், சென்னிஉம் தாள்கள்உம் சேர ஒன்றிட - சிரசும் பாதங்களும் ஒன்றுபடச் சேர்ந்திடவும், (வீமன்), தன் இரு செங்கையால் தாக்கி - தன்னுடைய இரண்டு செவ்விய கைகளாலும் மோதி, வான் தசை துன்னிய மலைஎன-மிக்கசதை நெருங்கிய குன்று என்று (கண்டவர்) சொல்லும்படி, சுருக்கினான் - (பரவியிருந்த அவனுடலைச்) சுருங்குமாறு பிடித்து வைத்தான் ; (எ - று.) கைகால் சென்னி முதலியவை ஒன்றுந் தெரியாது மாமிசபருவதமென்று ஒன்றுதான் தோன்றும்படி கீசகனுடைய உடலத்தை அடக்கியதனால், சுருக்கினா னென்றார். சென்னி தாள்களைக்கூறியது, கைக்கும் உபலட்சணம்: 84-ஆங் கவியைக் காண்க. அரோ-ஈற்றசை. 82. | மாற்றினானவன்பெருமையலாவியைக் கூற்றினார்கைக்கொளக்கொடுத்துத்தன்சினம் மாற்றினானத்திறலார்கொல்வல்லவர் காற்றினால்வருதிறற்காளையல்லதே. |
(இ -ள்.) அவன் - அந்தக் கீசகனுடைய, பெரு மையல் ஆவியை - மிக்க காமமோகங்கொண்ட உயிரை, மாற்றினான்-(உடம்பினின்று) வேறுபடுத்தினவனாய், கூற்றினார் கைக்கொள கொடுத்து-யமன் கையினாற் பெற்றுக் கொள்ளும்படி கொடுத்து, (வீமன்), தன் சினம் மாற்றினான் - தன் கோபத்தைப் போக்கினான்: காற்றினால் வருதிறல் காளை அல்லது- வாயுதேவனா லுண்டாக்கப்பட்டுத் தோன்றிய வலிமையுள்ள இளவெருதுபோன்ற வீமசேனனை யல்லாமல், அ திறல் |