வேறு 87.-வீமன்உன்னைக்காதலித்தோர்இவனைப்போலவேயாவரென்று சொல்லித் திரௌபதியையனுப்பிவிட்டுத் தானுஞ் செல்லல். வாச மென்குழன் மாதுநல்லாயுனை ஆசை கொண்டவ ரிப்படியாவர்காண் ஏசின் மங்கைநல் லாயினியேகெனா மாசி லானு மடைப்பளியெய்தினான். |
(இ - ள்.) 'வாசம் மெல் குழல் மாது நல்லாய் - நறுமணமுள்ள மெல்லிய கூந்தலையுடைய அழகிய பெண்ணே! உனை ஆசை கொண்டவர் - உன்னை விரும்பியவர், இப்படி ஆவர்காண் - இந்தக்கீசகன்போலவேயாவர் கண்டாய் : ஏசு இல் மங்கை நல்லாய் - குற்றமற்ற மங்கைப் பருவமுள்ள பெண்ணே ! இனி ஏகு - இனிச் செல்வாய்,' எனா - என்றுசொல்லி(த் திரௌபதியை) யனுப்பிவிட்டு,-மாசுஇலான்உம் - மனம்மாசுநீங்கிய அந்த வீமனும், மடைப்பளி எய்தினான் - (தனக்கு உரிய இடமாகிய) சமையலிடத்தை யடைந்தான். இதுமுதல் இந்தச்சருக்கம் முடியுமளவும் இருபத்தொரு கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் மூன்றாஞ்சீரும் மாச்சீர்களும், மற்றையவை விளச்சீருமாகிவந்த அளவடிநான்குகொண்ட கலிவிருத்தங்கள். 88.-அப்போதுதோன்றியபலவகையோசையால் கீசகன்தம்பிமார்துயிலுணர்தல். தோட்டுமென்மலர்ச்சோலையினோதையும் மோட்டுவன்கரமுட்டியினோதையும் மாட்டுவன்சுதைமண்டபத்தோதையும் கேட்டுணர்ந்தனர்கீசகன்றம்பிமார். |
(இ -ள்.) தோடு - அகவிதழ்களையுடைய, மெல் மலர்-மெல்லிய புஷ்பங்களையுடைய, சோலையின் - சோலையிலே, ஓதைஉம் - (மானுடசஞ்சாரம் முதலியவற்றால் தோன்றிய) ஓசையையும், மோடு வல் கரம் முட்டியின் ஓதைஉம் - பருத்த வலிய கைம்முட்டிகளால் மோதியதனாலான ஓசையையும் மாடு வள் சுதை மண்டபத்து ஓதைஉம் - (அச்சோலைக்குப்) பக்கத்திலேயுள்ள வளவிய சுண்ணாம்புபூசிய மண்டபத்தினின்று தோன்றிய ஓசையையும், கேட்டு-, கீசகன் தம்பிமார் - உபகீசகர்யாவரும், உணர்ந்தனர் - துயிலுணர்ந்தார்கள் ; (எ - று.) (140) 89.-மூன்றுகவிகள் -ஒருதொடர்: உபகீசகர் தம்மனத்திற்கருதியதைக் கூறும். தொய்யிலாதிசுதேட்டிணைக்கொப்பனை கையிலாரழ கேறக்கவின்செயும் தையலாள்பொருட்டாகத்தனக்குறு மையலான்மிகவாடிவருந்தினான். |
|