பக்கம் எண் :

86பாரதம்விராட பருவம்

      (இ -ள்.) சுதேட்டிணைக்கு - விராடன்மனைவியான சுதேஷ்ணையென்
பவளுக்கு, தொய்யில் ஆதி - தொய்யில்முதலிய, ஒப்பனை -
அலங்காரங்களை, கையில்-(தன்) கையினால், ஆர் அழகு ஏற-நிரம்பிய அழகு
பொருந்த, கவின் செயும் - அலங்கரிக்கவல்ல, தையலாள் பொருட்டாக -
பெண்ணின்நிமித்தம், (நமது அண்ணனாகிய கீசகன்), தனக்கு உறு மையலால் -
தனக்குப் பொருந்திய காமமயக்கத்தால், மிக வாடி-, வருந்தினான் -
வருத்தமுற்றிருந்தான் ; (எ - று.)

     தொய்யில் - மகளிரின் தோள்களிலும் தனங்களிலும் சந்தனக் குழம்பால்
எழுதுங் கோலம்.                                            (141)

90.வண்டறாதமலர்க்குழல்வல்லியைக்
கண்டகாவிலிக்கங்குற்பொழுதிடைச்
சண்டவேகக்களிறன்னதன்மையான்
கொண்டமாலிற்குறுகினன்போலுமால்.

      (இ -ள்.) (ஆகையால்), வண்டு அறாத மலர் குழல் வல்லியை)
வண்டுகள் நீங்காத மலர்களையணிந்த கூந்தலையுடைய கொடிபோன்ற
பெண்ணாகிய அந்தவண்ணமகளை, கண்ட - பார்த்த, காவில்-சோலையிலே, இ
கங்குல் பொழுதிடை - இந்தஇராத்திரியிலே, சண்டம் வேகம் களிறு அன்ன
தன்மையான் - கொடிய வேகத்தையுடைய மதயானைபோன்ற
தன்மையையுடையனான (நம்அண்ணனான) கீசகன், கொண்ட - (தான்)
அடைந்துள்ள, மாலின் - காமமோகத்தினால், குறுகினான்போலும் -
நெருங்கினான்போலும் ; (எ - று.)

     போலும் என்பது - அந்தஉபகீசகர்கள் தம்ஊகத்தைப்பேசுகின்றா
ரென்பதைப் புலப்படுத்தும்.  ஆல் - ஈற்றசை.                     (142)

91.தூவிவாசந்துளிமதுச்சோலையில்
ஏவலாலியற்றும்மெழிற்பாவைமெய்க்
காவலாகிய கந்தருவப்பெயர்த்
தேவரால்வெஞ் செருவுளதானதோ.
 
    
(இ - ள்.) வாசம் தூவி-நறுமணத்தைச் சிதறவிட்டுக்கொண்டு-மது துளி -
தேனைச் சொட்டுகின்ற, சோலையில் - அந்தச்சோலையிலே,-ஏவலால் -
(அரசன்தேவியின்) கட்டளைப்படியே, இயற்றும் - பணிசெய்கின்ற, எழில் -
அழகிய, பாவை-பிரதிமை போன்றவளான அந்த வண்ணமகளின், மெய்-
உடலுக்கு, காவல் ஆகிய -, கந்தருவப் பெயர் தேவரால்-கந்தருவரென்று
பேர்பூண்ட தேவவர்க்கத்தவரோடு, வெம் செரு-கொடியபோர், உளது ஆனதுஓ
- நேரிட்டதோ? (எ - று.) - அதனால்தான் இவ்வாறான ஓசைகள்
தோன்றியிருக்க வேண்டுமென உணர்ந்த  உபகீசகர் எண்ணினார் என்று
வருவித்து முடிக்க.  சோலையில் காவலாகிய கந்தருவப்பெயர்த்தேவரால் செரு
உளதானதோ? என்க.                                         (143)