92.-அங்ஙன் கருதிய உபகீசகர்சோலையைநோக்கிச் சினத்தோடு ஓடுதல். அழிந்தகீசகனன்றிமற்றுண்டென மொழிந்ததம்பியர்நூற்றொருமூவரும் கழிந்ததீயுமிழ்கண்ணினராயுயிர் ஒழிந்துபோதுமென்றுன்னினரோடினார். |
(இ -ள்.) அழிந்த - உயிரொழிந்த, கீசகன் அன்றி - கீசகனல்லாமல், மற்று - பின்னும், உண்டு என மொழிந்த - உள்ளாரென்று கூறப்பட்ட, தம்பியர் நூற்றொருமூவர்உம் - (அந்தக்கீசகனுடைய) தம்பிமாரான நூற்றொரு மூன்றுபேர்களும்,-கழிந்த - மிக்க, தீ - நெருப்பை, (பெருஞ்சினத்தால்), உமிழ் - வெளிச்சொரிகிற, கண்ணினர் ஆய் - கண்களையுடையவராய், உயிர் ஒழிந்துபோதும் என்று - நம்முயிர் ஒழியப்பெற்றாலும் போகிறோமென்று, உன்னினர் - எண்ணினவராய், ஓடினார்-(அந்தச்சோலையைக் குறித்து) ஓடிச்சென்றார். 'கந்தருவரோடு செருவிளைந்து அதனால் நம்மண்ணனுக்கு ஒருகால் மரணம் நேரிட்டிருப்பின் நாம் சென்றாலும் நமக்கும் அந்நிலை நேரக்கூடும்: ஆயினும் ஒருகை பார்த்தேதீரவேண்டும்' என்று கருத்துடனே அந்த உபகீசகர் சோலையைநோக்கி விரைந்துசென்றன ரென்பதாம். முதனூலுக்குஏற்ப 'நூற்றொ டொரைவரும்' என்று பாடமிருப்பின் நலம். (144) 93.-பன்னூறு தீபங்களோடுஅந்தச்சோலையிலே சென்று உபகீசகர் தேடிப்பார்த்தல். நகரியெங்கும்வெருவரநள்ளிருள் நுகருமாறுபன்னூறொளித்தீபமோடு அகருநாறுதண் காவிலரும்பகல் நிகருமென்னநெருங்கினர்நேடினார். |
(இ -ள்.) நகரி எங்குஉம்-(அந்தஉபகீசகர் செய்த ஆர்ப்பாடத்தினால்) அந்தவிராடநகரில் எவ்விடத்திலுள்ளாரும், வெருவர - அச்சமடையாநிற்க,- அரும் பகல் நிகரும் என்ன - (அவ்விரவு) அருமையான பகற்பொழுதை யொத்திருக்கு மென்று கருதும்படி, நள் இருள் நுகரும் ஆறு - செறிந்த இருளைப் போக்குமாறு, பல் நூறு ஒளிதீபமோடு-பல நூற்றுக்கணக்கான ஒளியைக்கொண்ட தீபத்தோடு, அகரு நாறு தண் காவில் - அகருவின் மணம் வீசுகின்ற குளிர்ந்த அச்சோலையில்,(அந்தஉபகீசகர்கள்),நெருங்கினர்- நெருங் கிப்போய், நேடினார்- (நிகழ்ந்ததை யுணருமாறு) தேடிப்பார்த்தார்கள்; (எ- று.) 94.-உபகீசகர்மண்டபத்திடையிலே வீமனாற் சிதைவுண்ட கீசகன்வடிவைக் காணுதல். சுதைநிலாவொளிசூழ்மண்டபத்திடைச் சிதைவுமெய்யொடுஞ்செம்பொற்சிலம்பெனக் |
|