பக்கம் எண் :

88பாரதம்விராட பருவம்

கதைவலான்வெங்கடுங்கொடுங்கைகளால்
வதைசெய்தம்முன்வடிவுகண்டார்களே.

      (இ -ள்.) சுதை நிலா ஒளி சூழ்-சுண்ணச்சாந்தின் வெண்ணிறவொளி
சூழப்பெற்ற, மண்டபத்திடை - மண்டபத்திலே, சிதையும் மெய்யொடுஉம் -
(உறுப்புக்கள் தெரியாது) சிதைந்துள்ள உடம்புடனேகூடிய, கதை வலான் வெம்
கடுங் கொடுங் கைகளால் வதைசெய் - கதாயுதத்தில்வல்லவனான
வீமசேனனுடைய வெவ்விய மிகக்கொடிய கைகளாற் கொல்லப்பட்ட, தம் முன்
வடிவு - தமது அண்ணனுடைய வடிவத்தை, (அந்த உபகீசகர்கள்), செம்பொன்
சிலம்பு என - மேருமலைபோல(த் தோன்ற), கண்டார்கள்-: (எ - று.)

95.-சுதேஷ்ணைக்குக் கீசகன்மாண்ட செய்தியைக் கூறிப் புலம்பி
   விட்டு, உபகீசகர், அயலறியாமல்அவனுடலைச் சுட்டெரிக்க  
எண்ணுதல்.

பழுதுடைப்பெரும்பாதகன்மாண்டமை
தொழுதுரைத்துச்சுதேட்டிணைதன்னொடும்
அழுதரற்றி யயலறியாவகை
எழுதழற்கணிடுவதற்கெண்ணினார்.

      (இ -ள்.) பழது உடை - குற்றமுள்ள, பெரும் பாதகன் - (பரதாரத்தை
விரும்புதலாகிய) பெரும்பாதகத்தைச் செய்தவனாகிய கீசகன், மாண்டமை -
இறந்துவிட்டதை, சுதேட்டிணை தன்னொடுஉம் - சுதேஷ்ணையினிடத்து,
தொழுது உரைத்து-வணங்கிச் சொல்லி, (அந்த உபகீசகர்கள்), அழுது அரற்றி -
புலம்பி வாய்விட்டுக்கதறி, (பிறகு), அயல் அறியா வகை - பிறர்க்குத்
தெரியாதபடி, எழு தழற்கண் - பற்றியெரிகின்ற நெருப்பிலே, இடுவதற்கு-
(அவ்வுடலை) இட்டுச் சுட்டெரிப்பதற்கு, எண்ணினார் - நினைத்தார்;

96.-உபகீசகர்தம்அண்ணனுடலுடன் அவனது மரணத்திற்கு
ஏதுவான வண்ணமகளையுமஉடனிட்டெரிக்க நிச்சயித்தல்.

எண்ணிலாமனத்தெம்முனையெண்ணுடை
விண்ணுளார்சிலர்வீத்ததற்கேதுவாம்
வண்ணமாமகடன்னையும்வன்னியால்
அண்ணலோடு மடுதுமென்றார்களே.

    (இ - ள்.) 'எண் இலா மனத்து - (பிறவீரரை) மதித்தலில்லாத மனத்தை
யுடைய, எம்முனை - எமக்கு முன்பிறந்தவனான [அண்ணனான] கீசகனை,
எண்உடை விண்உளார் சிலர்-மதிப்புள்ள தேவவருக்கத்தைச் சேர்ந்த சிலர்,
வீத்ததற்கு - கொல்லுதற்கு, ஏது ஆம் - காரணமாக விருந்த, வண்ணமாமகள்
தன்னைஉம் - வண்ணமகளாகத் தொழில்புரிபவளையும், அண்ணலோடுஉம் -
பெருமைவாய்ந்த அண்ணனுடனே, வன்னியால் - ஈமவெரியாலேயே,