அடுதும் -எரித்திடுவோம்,' என்றார்கள் - என்று (அந்த உபகீசகர்) தீர்மானித்திட்டார்கள்; (எ - று.) எண்ணிலாமனத் தெண்ணுடை-தொடைமுரண், வண்ணமகளையும் ஈமவெரியாலடுமாறு உபகீசகர் வெகுளியால் தீர்மானித்தனரென்க. எண் நிலா மனத்து என்று பிரித்து - வலி நிலாவுகின்ற மனத்தையுடைய என்று பொருள் கூறுவாருமுளர்: இப்பொருளில் எண்-ஏண்என்பதன் விகாரம். விண்ணுளா ரென்றது, கந்தருவரை. 97.-இரண்டு கவிகள்-ஒரு தொடர்:வண்ணமகளை ஈமவெரியிலிடு மாறு உபகீசகர் வந்துபற்றுதலும் அவள் தன்மெய்காக்குங் கடவுளரைக்குறித்து அரற்றுதல். சொல்லுமாடவர்சொல்லினராயினும் கொல்லுமோகனறான்பெற்றகோதையை மல்லன்மாலையினார்வந்துபற்றலும் அல்லல்கூர வரற்றினளாலவள். |
(இ-ள்.) சொல்லும்-(இவ்வாறு வண்ணமகளை ஈமவெரியிலிட்டெரிக்குமாறு தீர்மானித்துச்) சொல்லிய, ஆடவர்-, சொல்லினர் ஆயினும்-, கனல் - அக்கினி, தான் பெற்ற கோதையை - தான் பெற்ற பெண்ணை, கொல்லும்ஓ-உயிர்நீங்கச் சுட்டெரிக்குமோ? [எரிக்காதன்றோ?] (இதுநிற்க): மல்லல் மாலையினார் - வளப்பமுள்ள மலர்மாலையை யணிந்தவரான உபகீசகர்கள், வந்து-, பற்றலும் - (அந்தவண்ணமகளைப்) பிடித்துக்கொள்ளுதலும், அவள்-, அல்லல்கூர- துன்பம்மிக, அரற்றினள் - கதறலானாள்; (எ - று.) அந்தவண்ணமகள் அரற்றினவகை மேற்கவியிற் பெறப்படும். முதலிரண்டடிகள்-உபகீசகரெண்ணம் பலிக்கா தென்பதைப் பற்றிய கவிக்கூற்று: ஒருகால் உபகீசகர்கள் அந்தத்திரௌபதியை ஈமவெரியிலிட்டாலும், எரியினின்று பிறந்தவளான அவளை அந்தஎரி எரிக்காதென்றவாறு. கோதை - மயிர்முடி: உடையாளுக்கு ஆகுபெயர்: இனி, கோதை - மாலை: அதுபோல் மெல்லியலாளுக்கு உவமவாகு பெயருமாம். (149) 98. | வெருவருங்கருங் கங்குலில்வெங்கொலை நிருபரென்னைநெருப்பிடைவீழ்த்துவான் கருதினார்கண்மெய்காக்குங்கடவுள்காள் வருதிரென்றுகண்வார்புனல்சோரவே. |
(இ -ள்.) 'வெருவரும் - அஞ்சத்தக்க, கருங் கங்குலில்-கரிய இரவிலே, வெங் கொலை நிருபர் - கொடிய கொலைப்பாதகத்தைச் செய்யக்கருதிய சில மன்னவர், என்னை-, நெருப்பிடை-, வீழ்த்துவான் - தள்ளும்பொருட்டு, கருதினார்கள் - எண்ணியுள்ளார்கள்: மெய்காக்கும் கடவுள்காள் - என்னுடலைப் பாதுகாக்கின்ற தெய்வங்களே! வருதிர் - (என்னைப் பாதுகாக்க) வாருங்கள்,' என்று - என்றுசொல் |