பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 93

அந்தயுத்தமும், வல் கிரியின் மன்னும் கிளர் விளக்கு ஆனது - வலிய
மலைமீதுபொருந்திய கொழுந்துவிட்டெரிகின்ற தீபம்போல எங்கும்
விளக்கமுற்றுப்பரவியது; (எ - று.)

      பலநகரங்களிலும் இதேபேச்சாயிற் றென்றவாறு.  சூரியன் குன்றின்
மேலிட்ட விளக்குப்போன்று உலகெங்கும் பிரகாசித்தனனன்றோ:
அதுபோலவே கீசகர்களின்வதமும் எங்கும் தெரிய லாயிற்றென்க.  இருள்வலி
- இருளையொழிக்கும் வலிமைபெற்றவன் எனச்சூரியனுக்கு
அன்மொழித்தொகை.                                      
(157)

106.-தன் மைத்துனன்மார்கந்தருவரா லிறந்தது கேட்டு
விராடன் மெலிவுழத்தல்.

புலியினும்பெரும்போரிற்றனித்தனி
வலியராகியமைத்துனர்யாரையும்
பலியிடுங்கந்தருவரைப்பார்க்கவே
மெலிவுழந்தனன்விற்கைவிராடனே.

      (இ -ள்.) பெரும் போரில் - பெரிய போர்முனைகளில், புலியின்உம்
தனித்தனி வலியர் ஆகிய - புலியைக்காட்டிலும் தனித்தனி வலிமையைக்
காட்டுபவராகிய, மைத்துனர் யாரைஉம் - (தன்) மைத்துனர் யாவரையும்,
பலியிடும் - உயிர்ப்பலிகொண்ட, கந்தருவரை -, பார்க்கவே-, வில் கை
விராடன் - வில்லையேந்திய கையையுடைய விராடமன்னவன், மெலிவு
உழந்தனன் - மனச்சோர்வடைந்தான்; (எ - று.)

     மைத்துனர் யாரையும் பலியிடுங் கந்தருவரைப் பார்த்தல் தன்
மைத்துனன்மாருயிரைக் கந்தருவர்கொள்ளை கொண்டா ரென்று உணர்தல்.
பார்த்தல் - இங்கு, மனத்தாற் காணல்.  பார்க்கவே என்ற இடத்து, பற்றவே
என்றும் பாடமுண்டு.                                         (158)

107.-பெரும்பாலும்அஜ்ஞாதவாசகாலம் கழிந்துவிட்டதால்
பாண்டவர் இனி விரைவில் வெளிப்படுவோமென்ற
மனப்பான்மையோ டிருத்தல்.

காண்டகுந்தம வேடங்கரந்துறை
யாண்டுசென்றதினிச்சிலநாளென
மீண்டுதோன்றுதுமென்றுவிரதராம்
பாண்டுமைந்தரும்பான்மையினண்ணினார்.

      (இ -ள்.) விரதர் ஆம் - விரதவொழுக்கத்தை யுடையவரான, பாண்டு
மைந்தர்உம் - பாண்டவர்களும்,- 'காண்தகும் தம வேடம் - (இன்னாரென்று)
கண்டறியத்தக்க நிஜரூபத்தை, கரந்து - மறைத்துக்கொண்டு, உறை -
வசிக்கின்ற, யாண்டு - ஒருவருஷமும், இனி சில நாள் என - இனிச் சில
நாளே யுள்ளன என்னுமாறு, சென்றது -