புன்சிரிப்புக் கொண்டருளி, 'இகலோர் சொன்ன அ வண்ணம் புகலாமல் - வலிமையையுடைய மற்றைப் பாண்டவர்கள் கூறின அந்தப்படி கூறாமல், இவன் - இச்சகதேவன், விரகு உரைத்தான் - தந்திரமாகச் சொன்னான்,' என்ன - என்று கருதி, அவனோடு - அச்சகதேவனுடனே, ஆங்கு - அவ்விடத்தில் [அல்லது அப்பொழுது], ஓர் பை வண்ணம் மணி கூடந்தனில் எய்தி - பசுமை நிறமுள்ள மரகத ரத்தினங்களால் அமைக்கப்பட்டதொரு மண்டபத்தினுள்ளே (மற்றவர்களைவிட்டுச்) சென்று,- (சகதேவனை நோக்கி,)- 'பாரதம் போர் பயிலாவண்ணம் - பாரத யுத்தம் நடவாதபடியும், உய்வண்ணம் - (எல்லாரும்) அழியாது பிழைத்து வாழும்படியும், நீ-, உபாயம் சொல்லுக - (தக்கதோர்) உபாயத்தைச் சொல்வாயாக', என - என்று சொல்ல, உரம்கொள் வேலான் - வலிமையைக்கொண்ட வேலாயுதத்தை யுடையவனான சகதேவன், தொழுது - (கண்ணனை) வணங்கி, உரைப்பான் - கூறுபவனானான்; (எ - று.)-அதனை, அடுத்த இரண்டு கவிகளிற் காண்க. கண்ணனுக்கு நகைப்பு, தனது திருவுள்ளக்கருத்தை உள்ளபடியறிந்து கூறிய சகதேவனது திறத்தைக் கண்டு வியந்ததனாலானது. தனது கருத்தை வெளியிடாதிருக்கவேண்டி இங்ஙனம் கண்ணன் சகதேவனைத் தனியே வினாவுமாறு ஏகாந்தமாக அழைத்துச் சென்றன னென்க. விரகு உரைத்தான் - (நமது) மாயையை எடுத்துக் கூறினான் என்றுமாம். பாரதப்போர் - பாரத வம்சத்தாருள் நிகழும் போர். (93) வேறு. 34.-சகதேவன் கூறும்உத்தரம். நீபா ரதவமரில்யாவரையு நீறாக்கிப் பூபாரந் தீர்க்கப்புரிந்தாய் புயல்வண்ணா கோபாலா போரேறேகோவிந்தா நீயன்றி மாபா ரதமகற்றமற்றார்கொல் வல்லாரே. |
இதுவும் அடுத்த கவியும் - ஒரு தொடர். (இ -ள்.) 'புயல் வண்ணா - மேகம்போலக் கரிய திருநிறமுடைய வனே! கோபாலா - பசுக்களைக் காக்கும் இடைச்சாதியில் வளர்ந்தவனே! போர் ஏறே - போரில் ஆண்சிங்கம் போன்றவனே! கோவிந்தா - கோவிந்தனென்னுந் திருநாமமுடையவனே!-நீ-, பாரதம் அமரில் - பாரத யுத்தத்தில், யாவரையும் நீறு ஆக்கி - எல்லாரையும் அழியச் செய்து, பூ பாரம் தீர்க்க - பூமிதேவியின் சுமை மிகுதியை யொழிக்க, புரிந்தாய் - விரும்பியருளினாய்; (ஆதலால்) மா பாரதம் - (உன் கருத்துப்படி நிகழும்) பெரிய பாரதப் போரை, நீ அன்றி - (அதனை நடத்தும்) நீயே யல்லாமல், அகற்ற வல்லார் - ஒழிக்கவல்லவர், மற்று ஆர்கொல் - வேறு யாரோ? [எவருமில்லை யென்றபடி]; (எ - று.) |