பக்கம் எண் :

126பாரதம்உத்தியோக பருவம்

     (இ -ள்.) 'எம்பெருமான் - எமது தலைவனே! - மன்றில் - சபையிலே,
அழைத்து - (துச்சாதனனால்) வருவித்து, எனக்கு -, மாசு அளித்த -
(மானபங்கமாகிய) குற்றத்தை (ச்செய்து) தந்த, மன்னவன்பால் -
துரியோதனராசனிடத்தில், சென்று - (இரந்து) போய், திறல் வீரர் -
வலிமையையுடைய வீரர்களாகிய பாண்டவர்கள், தமக்கு ஐந்து ஊர் பெற்று -
தங்கட்கு ஐந்து ஊர்களைப்பெற்று, இருந்தால் - வாழ்ந்திருந்தால்,-வல்
வினையேன் - கொடிய தீவினையையுடைய வளாகிய யான், அன்று விரித்த
அருங் கூந்தலை - (துகிலுரிந்த) அக்காலத்து விரித்திட்ட அருமையாகிய
கூந்தலை, இனி என்று முடிப்பது - இனிமேல் எப்பொழுது முடித்திடுவது,'
என்று - என்று சொல்லி, அழுதாள் - புலம்பினாள்; (எ - று.)

     அருங்கூந்தல் - இத்தன்மையதாய் அழகியதாக நீண்டுவளர்ந்த
தொகுதியான கூந்தல் பிறர்க்கு இல்லை யென்றபடி; அல்லது, எல்லா
அழகுகளினும் மயிர் முடியழகுசிறந்ததாக முதலில் எடுத்துக் கூறப்படுதலின்,
அதுபற்றி, 'அருங்கூந்தல்' என்றதாகவும் கொள்ளலாம்.  வெகுகாலமாகத்தான்
பலவகைத் துன்பங்களை அனுபவித்ததற்குக் காரணமான தனது கொடிய வலிய
ஊழ்வினையைத் தானே வெறுத்துக்கொண்டாள்.  பெருமான் -
பெருமையையுடையவன்; ஈற்று 'மை' போன பெரு என்னும் பண்படி - பகுதி
மான் - ஆண்பாற் பெயர்விகுதி; ஆன் - விகுதியென்றால், பண்புப்பெயர்
ஈற்றைகாரம் மாத்திரங் கெட்டதென்க.  இச்சொல், இங்கே, இயல்பாகிய
அண்மை விளி.  என்று என்ற வினா - இனி முடித்தலில்லையென
எதிர்மறையோடு இரக்கத்தையும் உணர்த்தும்.                     (105)

46.-சாத்தகி 'சமாதானங்கூடாது' என்றல்.

தண்டிருந்த திவன்கரத்திற்றனுவிருந்த தவன்கரத்தில்
வண்டிருந்த பூங்குழன்மேன்மாசிருந்த தெனவிருந்தாள்
கண்டிருந்தீ ரெல்லீருங்கருதலர்பா லூர்வேண்டி
யுண்டிருந்து வாழ்வதற்கேயுரைக்கின்றீ ருரையீரே.

     (இ -ள்.) (திரௌபதியைச் சபையில் இழுத்துவந்து துகிலுரிந்த
காலத்தில்), இவன் கரத்தில் - இந்த வீமசேனனது கையிலே, தண்டு இருந்தது-
(சத்துருகாதினியென்னுஞ் சிறந்த) கதாயுதம் இருந்தது; அவன் கரத்தில் - அந்த
அருச்சுனனது கையிலே, தனு இருந்தது - (காண்டீவமென்னுஞ் சிறந்த) வில்
இருந்தது; (அங்ஙனமிருந்தும்), வண்டு இருந்த பூங்குழல் - வண்டுகள்
இடைவிடாது மொய்த்திருத்தற்கு இடமான பூக்களை முடித்த கூந்தலை
யுடையவளான திரௌபதி, மேல் மாசு இருந்தது என - தன் மேலே
(மானபங்கமாகிய) பழிப்பு நிலைத்து நின்றதென்று (யாவரும்) சொல்லும்படி,
இருந்தாள் - (அவமானமடைந்து) இருந்தாள்;(அந்நிலையை), எல்லீரும் -
நீங்களெல்லோரும், கண்டு இருந்தீர் - (கண்ணெதிரிற்) பார்த்துக்கொண்டு
(அப்பொழுது சும்மா) இருந்துவிட்டீர்கள்; (இப்பொழுதும்), கருதலர்பால் ஊர்
வேண்டி உண்டு இருந்து வாழ்வதற்கே உரைக்கின்றீர் - மதியாத
பகைவர்களிடத்தில் ஒவ்வொரு ஊரை