பக்கம் எண் :

166பாரதம்உத்தியோக பருவம்

னதுதிருவடியைப் பிரமன் தன் கைக்கமண்டலதீர்த்தத்தாற் கழுவி விளக்க,
அந்த ஸ்ரீபாததீர்த்தமாகப் பெருகிய நீரே கங்காநதி யென்பது.
கருணையங்கடலென்றதற்கு ஏற்ப, 'கங்கைமாநதி கால்வழி' என்பது ஒரு
சமத்காரம்; கால் - வாய்க்கால்.                            (151)

92.-கண்ணன் தான் தூதுவந்தமைகூறுதல்.

தோட்டுவந்துசெந்தேனுகர்சுரும்புசூழ்தொடையாய்
காட்டுவந்துமுன்றிரிந்துதங்கடவநாள்கழித்து
நாட்டுவந்தபேரைவர்க்குநற்குருநாடு
கேட்டுவந்தனமென்றனன்விதுரனுங்கேட்டான்.

     (இ -ள்.) (அதுகேட்ட கண்ணபிரான்), - (விதுரனை நோக்கி), 'தோடு
வந்து செம் தேன் நுகர் சுரும்பு சூழ் தொடையாய் - பூவிதழ்களில் வந்து
சிவந்ததேனைப்பருகுகிற வண்டுகள் சுற்றிலும் மொய்க்கப்பெற்ற
மாலையையுடையவனே! - முன் காடு உவந்து திரிந்து - முன்னே காடுகளில்
மகிழ்ச்சி கொண்டு சஞ்சரித்து, தம் கடவ நாள் கழித்து - (முன்பு
அஜ்ஞாதவாசத்தில்) தாங்கள் கழிக்கக் கடமைப் பட்டனவான நாள்களையும்
கழித்து, நாடு வந்த - (இப்பொழுது) மச்ச தேசத்து உபப்பிலாவியத்தில்
(வெளிப்பட்டு) வந்துள்ள, பேர் ஐவர்க்கு - ஐந்துபேருக்கு
[பஞ்சபாண்டவர்க்கு], நல் குருநாடு கேட்டு - சிறந்த குருநாட்டிற்
பாகங்கேட்டற்கு, வந்தனம் - வந்தோம்,' என்றனன் - என்று கூறியருளினான்;
- விதுரனும்-, கேட்டான் - (அதனை அன்போடு) கேட்டான்; (எ - று.)

    'விதுரனுங்கேட்டான்,' என வேண்டாது கூறினது, அவன்
பாண்டவரிடத்தில் மிக்க அன்புகொண்டுள்ளவனாதலால் கண்ணன்
கூறியதைப்பேராவலோடு கேட்டுக்கொண்டாடினா னென்பதைக் குறிப்பிக்கும்.
முதலடியில்உவந்த எனப் பிரித்து - மகிழ்ந்து என்றும், இரண்டாமடியில்
வந்து எனப்பிரித்து - சென்று என்றும் உரைத்தலுமாம்.  பேரைவர் -
பெருமையையுடையஐவரென்றுமாம்.  கேட்டு - கேட்க என்னுஞ்
செயவெனெச்சத்தின் திரிபு.                                  (152)

93.-விதுரன், சமாதானத்தில்துரியோதனன் அரசுகொடான்
என்றல்.

முழக்கினாலுயர்முரசுயர்த்தவன்றனக்குரிமை
வழக்கினாலறிந்தடலரவுயர்த்தகோன்வழங்கான்
தழக்கினாலிருதிசையினுமுரசெழச்சமரில்
உழக்கினாலலதுணர்வனோவென்றவனுரைத்தான்.

     (இ -ள்.) (அங்ஙனம் கண்ணபிரான் கூறியதற்கு, உடனே),- அவன் -
அவ்விதுரன், - 'அடல் அரவு உயர்த்த கோன் - கொடுமையையுடைய
பாம்புக்கொடியை உயர எடுத்த அரசனாகிய துரியோதனன், முழக்கினால் உயர்
முரசு உயர்த்தவன் தனக்கு - ஆரவாரத்தால் மிக்க முரசின்வடிவை யெழுதிய
கொடியை உயரவெடுத்தவனாகிய யுதிட்டிரனுக்கு, உரிமை - உரிய
இராச்சியபாகத்தை, வழக்கினால் அறிந்து - நீதிப்படி உணர்ந்து, வழங்கான் -
கொடுக்கமாட்