இடையன் -(இராச்சியத்தைப் பெறும் பொருட்டு) போரைச் செய்யக் கருதுகின்ற பாண்டவர்களது கட்டளையினால் வருகின்ற தூதனாகிய இடையர் சாதியனான கண்ணன், இன்று - இன்றைக்கு, நம் அவையில் - நமது இந்தசபையில், எய்தினால் - வந்தால், ஓவல் இன்றி எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூரில் - (நீங்கள் யாராயினும்) ஒழிதலில்லாமல் (அவனை) எதிர்கொண்டுபோய்ப் பார்த்து வணங்கி உறவு கொண்டாடுவீரானால், இனி உங்கள் ஊர் தீ வலம் செய அடர்ப்பன் - அதன்பின் உங்களுடைய ஊர்களைநெருப்புச் சூழும்படி கொளுத்தி விடுவேன்', என்று-, நனி சீறினான்-மிகக்கோபமாகக் கூறினான்;(எ - று.)
இராசதருமம் சிறிதுமில்லாத கொடுங்கோல் மன்னனாதலின், இங்ஙனங் கூறினான் என்பார், 'சீறினான் முறைமை மாறினான்' என்றார். 'உறவுகூறில்' என்ற பாடத்துக்கு - உறவுமுறைமைக்குரிய உபசாரவார்த்தைகளைச் சொன்னால் என்றபடி. ஓவல் இன்றி - சும்மா இராமல்; ஓவு - பகுதி; இதனைஒருவு என்பதன் மரூஉ என்பர். இடையர் மனையில் வளர்ந்தது மாத்திரத்தைக்கொண்டு, இடையனென இகழ்ந்தான். இங்ஙனம், பாண்டவர்மேலுள்ள கோபம், அவர் தூதனான கண்ணபிரான் மேலுஞ் சென்றது. (164) 105.-கண்ணபிரான்துரியோதனனது சபையில் எழுந்தருளுதல். இந்தவண்ணமுரைசெய்துமன்னருமிராசராசனுமிருக்கவே தந்தவண்ணனுடன்வந்த வண்ணலொளிதங்குகண்டுயிலுணர்ந்தபின் கந்தவண்ணமலர்கொண்டுகைதொழுதுகாலையிற் பல கடன்கழித் திந்தவண்ணமுனிருந்த பேரவையிலேயினானிசைகொள்வேயினான். |
(இ -ள்.) இந்த வண்ணம் - இவ்வாறு, உரை செய்து - கூறி, இராசராசனும் - துரியோதனனும், மன்னரும் - (மற்றை) அரசர்கள் பலரும், இருக்கவே - (சபையில்) வீற்றிருக்கையிலே,- இசை கொள் வேயினான் - சப்தசுரங்களையுமுடைய புல்லாங்குழலை (இளமையில் பசு மேய்க்கையில்) ஊதினவனாகிய, தந்தவண்ணனுடன் வந்த அண்ணல் - யானைத்தந்தம் போலவெளுப்பான திருமேனி நிறத்தையுடைய பலராமனுடன்பிறந்த பெருமைக்குணமுடைய கண்ணன், ஒளி தங்கு கண்துயில் உணர்ந்தபின் - (விதுரன் மனையில்) சூரியன் சந்திரனென்னும் இருசுடரின் வடிவமாகப் பொருந்திய தனதுகண்கள் உறங்குதலொழிந்து எழுந்த பின்பு, கந்தம் வண்ணம்மலர்கொண்டு கை தொழுது காலையில் பல கடன் கழித்து - பரிமளத்தையும்அழகையுமுடைய பூக்களைக் கையிலேந்திச் (சூரிய பகவானைக்) கைகூப்பிவணங்கி (இங்ஙனம்) உதயகாலத்திற் செய்தற்கு உரிய பல கடமைகளையுஞ்செய்துமுடித்து, இந்த வண்ணம் முன் இருந்தபேர் அவையில் ஏயினான் -இப்படி முன்னமே (துரியோதனாதியர்) கூடியிருந்த பெரிய சபையில்எழுந்தருளினான்; (எ - று.)
அண்ணல் - ஆண்பாற் சிறப்புப்பெயர்; பண்பாகுபெயரென்றுங் கூறுவர். பலராமன் வெண்மையான திருமேனி நிறமுடையனாதலின், |