இவர்களும்)அநேக எண்ணங்களை எண்ணினாலென்ன? போய் நகைக்கில் என் - (மறைவில்) சென்று சிரித்தாலென்ன? உரைத்த உண்மை மொழி பொய்த்தது என்று அமரர் புகலில் என் - (நான் முன்) சொன்ன வார்த்தை சத்தியந் தவறிற்றென்று தேவர்கள் சொன்னாலென்ன? வேய் மலர் தொடையல்- அணிந்த பூமாலையையுடைய, ஐவர் - பஞ்சபாண்டவர், என்னுடன்-, வெம்சமர் - கொடிய போரை, மிகைத்து விளைக்கில் - அதிகமாகச் செய்தால், என்- என்ன? ஈ இருக்கும் இடம் எனினும் - ஈ தங்குதற்குவேண்டிய அளவுஇடமாயினும், இ புவியில் அரசு அவர்க்கு இனி யான் கொடேன் - இந்தப்பூமியில் அரசாள அவர்களுக்கு இனி நான் கொடுக்கமாட்டேன்; (எ - று.) என்என்ற வினா, 'அதனால் எனக்கு வருவதொரு தீங்குமில்லை' என்றஎதிர்மறைப் பொருள்பட நின்றது. நான்காமடியில் நீ யெனப்பதம் பிரித்தல்பொருந்தாது. (174) 115.-கண்ணன் மீண்டும்துரியோதனனை வேண்டுதல். கார்வழங்குரு மெனச்சினத்தினொடுகண்ணிலான்மதலைகழறவும் பார்வழங்க நினைவில்லையேலவனிபாதியாயினும் வழங்குவாய் தார்வழங்குதடமார்பவென்னவதுதானுமன்னவன் மறுக்கவைந் தூர்வழங்குகெனவுற்றிரந்தனனிவ்வுலகெலா முதவு முந்தியான். |
(இ -ள்.) (என்று), கண் இலான் மதலை - திருதராட்டிர குமாரன் [துரியோதனன்], சினத்தினொடு - கோபத்துடனே, கார் வழங்கு உரும் என - மேகந்தருகிற இடியைப்போல, கழறவும் - (உறுதியாகச்) சொன்ன வளவில்,- இஉலகு எலாம் உதவும் உந்தியான் - இந்த உலகங்களையும் இவ்வுலகத்து உயிர்களெல்லாவற்றையும் படைத்தருளுந் திருநாபியையுடைய கண்ணபிரான், (துரியோதனனை நோக்கி), 'தார் வழங்கு தடமார்ப - மாலையுலாவப் பெற்ற பரந்த மார்பையுடையவனே! பார் வழங்க நினைவு இல்லை ஏல் - இராச்சிய பாகம் முழுவதையுங் கொடுக்கக் கருத்தில்லையானால், அவனி பாதி ஆயினும்வழங்குவாய் - அவ்விராச்சிய பாகத்திற் பாதியையாயினுங் கொடுத்திடுவாய்,'என்ன - என்று சொல்ல, அதுதானும் - அவ்வார்த்தையையும், மன்னவன் -துரியோதனன், மறுக்க - (கொடேனென்று) தடுத்துவிட,- (பிறகு கண்ணன்),'ஐந்து ஊர் வழங்குக என - ஐந்து ஊரையாயினுங் கொடுப்பாய்' என்று, உற்றுஇரந்தனன் - பொருந்தி [உடன்பட்டு வணக்கமாக] யாசித்தருளினான்; (எ - று.)
"ஒருநாலு முகத்தவனோ டுலகீன்றா யென்பரதுன், திருநாபி மலர்ந்த தல்லால் திருவுளத்தி லுணராயால்" என்பது சித்தாந்தமாதலால், 'உலகெலா முதவு முந்தியான்' என்றார். மார்பு பரந்திருத்தல் - உத்தம விலக்கணம். இங்ஙனம் லோபியைச் சென்று யாசிக்க இணங்குதல் அருமைபற்றி, 'உற்று இரந்தனன்' என்றார். உலகங்களையெல்லாந் தனதாகவுடையவன், முன்னே கொடையாளியான மாவலிபக்கல் மூவடி வேண்டியது போலவுமன்றி, இப்பொழுது |