பக்கம் எண் :

188பாரதம்உத்தியோக பருவம்

மெய்விளங்கவருகுருநிலத்தினிடைவந்துவெஞ்சமர்விளைக்கவே
கைவழங்குகெனநின்றதூணிடையறைந்துரைக்குமிவைகாவலன்.

     (இ -ள்.) பொய் வளர்ந்த மொழி மன்னன் - பொய் மிகுந்த
சொற்களையுடைய துரியோதனராசன், மற்று இவை புகன்ற பின்பு - இன்னும்
இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொன்னபின்பு, (கண்ணன்), 'புயவலியினால் -
தோள்களின் வலிமையினாலே, ஐவர் தங்கள் அரசும் கொடாமல் -
பஞ்சபாண்டவர்களது அரசாட்சியை (அவர்களுக்கு)க் கொடுத்திடாமல், அடல்
ஆண்மைகொண்டு - பல பராக்கிரமங்களால், எதிர் அடர்த்தியேல் - (நீ)
எதிரிற் போர் செய்வாயானால்,- மெய் விளங்க வரு குருநிலத்தினிடை வந்து
வெம் சமர் விளைக்க - உண்மை விளங்கப்பெற்ற குருக்ஷேத்திரத்திலே வந்து
கொடிய போரைச் செய்வதற்கு, கை வழங்குக -கைதட்டிக் கொடுப்பாயாக,'
என - என்றுசொல்ல,- காவலன் - துரியோதனராசன், (மிகக்கோபித்து), நின்ற
தூணிடை அறைந்து - எதிரில் நின்ற தூணின் மீது கையால்மோதி, இவை
உரைக்கும் - இவ்வார்த்தைகளைச் சொல்பவனானான்; (எ - று.) - அவற்றை,
மேல் நான்குகவிகளிற் காண்க.

     முன்சூதாட்டம் முடிந்தகாலத்திற் சொன்ன வார்த்தையின்படி
இப்பொழுது.  அரசுகொடாமல் பொய்வளர்ந்த மொழிமன்னனானதனால்,
அவன் வார்த்தையை இப்பொழுது கண்ணன் நம்பாமல் அவனைக் கையால்
தன்கையை அடித்துச் சபதஞ்செய்து தரும்படி கேட்டருளினான்.
'அடர்த்தியே' என்ற பாடத்துக்கு - 'போர்செய்வாயே' என்று பொருள்;
ஏகாரம்- இகழ்ச்சி விளக்கும்.  அவரவர் பராக்கிரமம் உள்ளது உள்ளபடி
அங்குவெளிப்படலாமென்ற கருத்தால் 'மெய்விளங்கவரு' என்ற
அடைமொழியைக்குருநிலத்துக்குக் கொடுத்த தென்னலாம்.  (180)

121.-இதுமுதல் நான்குகவிகள்- ஒருதொடர்; துரியோதனன்
பலவாறு பழித்துரைத்தல்.

புன்பிறப்புடையபொதுவர்தங்களொடு புறவிலானிரைபுரந்திடும்
உன்பிறப்பு முரலோடுகோவியருனைப்பிணித்தது மறந்துநீ
மன்பிறப்பிலுயர்குருகுலத்தவர்தம்வாய்மைதானுமொருமாசிலா
வென்பிறப்பு முணராமலோசபையிலிந்தவாசகமியம்பினாய்.

     (இ -ள்.) புல் பிறப்பு உடைய - இழிவான உற்பத்தியையுடைய,
பொதுவர் தங்களொடு - இடையர்களுடனே, புறவில் - முல்லை நிலமாகிய
காட்டிலே, ஆன் நிரை - பசுக்கூட்டங்களை, புரந்திடும் - மேய்த்திடுகின்ற,
உன் - உன்னுடைய, பிறப்பும் - பிறப்பின் இழிவையும், கோவியர் -
இடைப்பெண்கள், உனை - உன்னை, உரலோடு - உரலுடனே, பிணித்ததும் -
கட்டிவைத்ததையும், நீ மறந்து -, - மன் பிறப்பில் உயர் - இராசகுலங்களிலே
சிறந்த, குருகுலத்தவர்தம் - குருகுலத்திற் பிறந்த அரசர்களது, வாய்மை
தானும்- சத்தியத்தையும், ஒரு மாசு இலா என் பிறப்பும் - ஒரு குற்றமு