வோ, துளிவரும்புனல் பரிந்தருந்தியிடுசோறுதின்றுயிர் சுமந்துதோள் இளிவரும்படியிருந்த பாவியருமின்று மானநிலையுணர்வரோ. |
(இ -ள்.) ஐவருக்கும் உரியாளை - பாண்டவரைந்து பேருக்கும் உரிய மனைவியான திரௌபதியை, மன் அவையில் - இராச சபையிலே, (துச்சாதனனால்), அளிவரும் குழல்பிடித்து - வண்டுகள்மொய்க்கப்பெற்ற கூந்தலைப் பிடித்து இழுத்து வந்து, நான் -, எளி வரும் துகில் உரிந்தபோது -அவமானமுண்டாதற்குக் காரணமான வஸ்திராபஹரணத்தைச் செய்த காலத்தில்,அருகு இருந்து கண்டவர்கள் அல்லவோ - (யாதொன்றுஞ் செய்யமுடியாமல்)பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களன்றோ; துளிவரும் புனல் பரிந்துஅருந்தி - (காட்டில்) சிறுதுளிகளாக வருகின்ற [கிடைத்தற்கரிய] நீரைவருத்தப்பட்டு (அல்லது விரும்பி)க் குடித்து, இடு சோறு தின்று -(யாவராயினும்) இட்ட சோற்றைத் தாம் உண்டு, உயிர் சுமந்து - அரிதின்உயிரைத்தாங்கி, தோள் இளி வரும்படி இருந்த - புயங்கள் இழிவடையும்படிபிழைத்திருந்த, பாவியரும் - பாவிகளான அப்பாண்டவர்களும், இன்று -இப்பொழுது, மானம் நிலை உணர்வரோ - மானத்தின் நிலைமையைஅறிவார்களோ? [அறியாரென்றபடி]; (எ - று.)
அருந்துகில் எளிவு உரிந்தபோது எனப்பிரித்து இயைத்து, பிறரால் களைதற்கு அருமையான ஆடையை யான் எளிதில் கவர்வித்தபொழுது என்றுஉரைப்பாருமுளர். துரியோதனனது அக்கிரமத்துக்குத் துச்சாதனன் கைபோலஅபேதமாகத் துணை நின்றனனாதலால், 'நான் அளிவருங்குழல் பிடித்துத்துகிலுரிந்தபோது' என்றது. துளிவரும்புனல் பரிந்தருந்தி என்றது, கடுங்காட்டில் வேண்டியபொழுது நீர் கிடைத்தலரிதாதலின்; அதனைக் கீழ் நச்சுப்பொய்கைச் சருக்கத்து வரலாற்றாலுமறிக. இடுசோறு என்றது வனவாச காலத்தில் சூரியன் கொடுத்த அக்ஷயபாண்டத்தாலும், அஜ்ஞாத வாசத்தில் விராடராசனாலுங் கிடைத்த உணவை. 'உண்டு' என்பதற்குப் பதிலாக 'தின்று'என வினை மாற்றிக் கூறியது, இகழ்ச்சி விளக்கும். இளிவரும், இளிவா -பகுதி; அது - இழி வா என்ற இரண்டு பகுதிகள் ஒருசொல் தன்மைப்பட்டுப்போலிபெற்று நின்றது. இராச்சிய முழுவதையும் இரண்டற ஆளும்பாக்கியசாலிகளான எங்கள்போலன்றி, பாண்டவர்கள் இருந்த இராச்சியத்தையும்இழந்து அலைந்து வருந்துதற்கேற்ற தீவினையுடையரென்பான்,பாவியரென்றான். (183) 124. | அன்னையானவரு மிருவராமுதலளித்த தந்தையர்களை வராம், பின்னையாசைகொடு குருகுலத்துரிமைபெறுவரா மொரு பிறப்பிலோர், மின்னையாமிவர்களைவரும் பரிவினொடுதனித்தனி விரும்புவார், என்னையாமவரொடொருகுலத் தரசனென்பதம்மவிவை யென்கொலாம். |
(இ -ள்.) (இப்பாண்டவர்க்கு), அன்னை ஆனவரும் இருவர் ஆம் - தாயானவர்களும் இரண்டுபேராம்; முதல் அளித்த தந்தையர் |