கையை,சென்று நனி குறுகினான் - போய்த் தகுதியாக அடைந்தான்; சீலம் அற்றவர் சினந்தபோதும் - நல்லொழுக்கமில்லாதவர்கள் கோபங்கொண்ட காலத்திலும், ஒரு தீது இலாதவர் - சிறிதுந் துர்க்குணமில்லாத பெரியோர்கள், செயிர்ப்பரோ - (எதிரில்) கோபிப்பார்களோ? (எ - று.) துர்க்குணமுடைய துரியோதனன் இங்ஙனங் கோபங்கொண்டதற்குச் சற்குணநிதியான கண்ணன் எதிராகச் சிறிதுஞ் சீறினானில்லை யென்ற சிறப்புப்பொருளை, நான்காமடியிற் கூறிய பொதுப்பொருளால் விளங்கவைத்ததனால், வேற்றுப்பொருள்வைப்பணி. (185) 126.-கண்ணனுக்குவிருந்திட்டதுபற்றி விதுரனைத் துரியோதனன் சினந்து கூறுதல். கரிந்துமாலைசருகாகவும் புதியகமலவாண்முகம்வெயர்க்கவுந் திருந்துகண்ணிணை சிவக்கவுங் கொடியசெய்யவாயிதழ் துடிக்கவும் இருந்தபேரவையினெடிதுயிர்த்திடு மிராசராசனவனுக்கிவன் விருந்துசெய்தவுறவென் கொலென்றரசரெதிர் விதுரனை விளம்புவான். |
(இ -ள்.) மாலை - (தான் தரித்த) பூமாலைகள், கரிந்து சருகு ஆகவும் -கருகி உலர்ந்து போகவும்,-புதிய கமலம் வாள் முகம் - அன்றலர்ந்தசெந்தாமரை மலர்போன்ற ஒளியையுடைய தனது முகம், வெயர்க்கவும் -வேர்வையடையவும்,- திருந்து கண் இணை சிவக்கவும் - அழகாகவுள்ளஇரண்டு கண்களும் செந்நிறமடையவும்,-கொடிய செய்ய வாய் இதழ் துடிக்கவும்- கொடுஞ் சொற்களைச் சொல்லுந் தன்மையுள்ள சிவந்த தன் வாயின்உதடுகள் துடிக்கவும்,- இருந்த பேர் அவையில் நெடிது உயிர்த்திடும் -வீற்றிருந்த பெரியசபையிலே (அளவிறந்த கோபத்தாற்) பெருமூச்சு விடுகிற,இராசராசன் - துரியோதனன்,- (கண்ணன் சென்ற பின்பு), - அவனுக்கு இவன்விருந்துசெய்த உறவு என்கொல் என்று - 'அக்கண்ணனுக்கு இவ்விதுரன்விருந்துபசாரஞ் செய்தற்கு உரிய சம்பந்தம் யாதோ?' என்று சொல்லி, அரசர்எதிர் - (அங்கிருந்த) அரசர்களது முன்னிலையில், விதுரனை விளம்புவான் -விதுரனை (நிந்தித்து)ப் பேசுபவனானான்; (எ - று.) இக்கவியிற் கூறிய செயல் பலவும் - தீராப் பெருங்கோபத்தின் காரியம், சொல்லின் கொடுமையை வாயின்மேலேற்றிக் கூறினார், இவனுக்கும் அவனுக்கும் நெருங்கின உறவில்லை யென்பான், 'என்கொல்'என்றான்.(186) 127.-இதுவும், மேற்கவியும் -துரியோதனன் விதுரனைப் பழித்துக் கூறுதல். வன்பினாலவனி வௌவவென்றுகொலென்மனையிலுண்டியை மறுத்தவன், தன்பதாகினியொடினிதருந்தும்வகை தன்னிலின்ன முதியற்றினான், என்பிதாவொடுபிறந்து மின்றளவுமென்கையோதனமருந்தியும், அன்புதானுடைய னல்லனென்பகை தனக்கு முற்ற பகை யல்லனோ. |
|